87 ஊழியர்களுக்குத் தொற்று: வண்டலூர் பூங்கா மூடப்பட்டது

87 ஊழியர்களுக்குத் தொற்று: வண்டலூர் பூங்கா மூடப்பட்டது

1 mins read
015e715c-cb4a-4e64-ab48-5eea24590819
-

சென்னை: சென்னை வண்­ட­லூர் உயி­ரி­யல் பூங்­கா­வில் பணி­யாற்­றும் 87 ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளதை அடுத்து, இம்­மா­தம் 31ஆம் தேதி வரை பூங்கா மூடப்படு­வ­தாக பூங்கா நிர்­வா­கம் அறிவித்­துள்­ளது.

பூங்­கா­வில் உள்ள விலங்கு களைப் பாது­காக்­கும் பொருட்டு பூங்கா மூடப்­ப­டு­வ­தாக பூங்­கா­வின் இயக்­கு­நர் கர்ண பிரியா தெரி­வித்­துள்­ளார்.

தொற்று உறுதியான 87 பேரும் குறைந்த பாதிப்­பு­டன் தனி­மைப்­படுத்­தப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் அவர்­கள் மூலம் விலங்­கு­க­ளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்­ப­டா­மல் பாது­காப்­ப­தற்காகவே இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்ளதாக­வும் கர்ண பிரியா தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், பூங்­கா­வில் பரா­மரிக்­கப்­பட்டு வந்த 5 வய­து­டைய ஆண் சிங்­க­ம் ஒன்று உயி­ரி­ழந்­துள்ளது. அது, கொரோனா பாதிப்­பினால் உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கம் இருப்பதால், அதன் மாதி­ரி­கள் கொேரானா பரிசோத­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்­கி­டையே, பூங்கா நிர்­வா­கத்­தின் அலட்­சி­யத்­தால் பூங்கா ஊழி­யர்­கள் மூலம் பார்­வை­யா­ளர்­களுக்­கும் விலங்குகளுக்­கும் கொரோனா தொற்று பர­வி­யி­ருக்­க­லாம் என சமூக ஆர்­வ­லர்­கள் அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்மையில் குடும்பத்துடன் பூங்காவுக்குச் சென்று வந்தவர்கள் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.