மாணவி சீரழிப்பு; உடற்பயிற்சியாளர் கைது

மாணவி சீரழிப்பு; உடற்பயிற்சியாளர் கைது

1 mins read
27ef286a-52f7-4c59-8bf7-80c5950bd367
-

திருப்­பத்­தூர்: சமூக வலைத்தளம் மூலம் அறி­மு­க­மான பள்ளி மாணவியைக் கடத்­திச் சென்று பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய உடற்­ப­யிற்­சி­யா­ளரை திருப்­பத்­தூர் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

26 வய­தான நர­சிம்­மன் என்­ப­வர் உடற்­ப­யிற்­சி­யா­ள­ராக உள்­ளார். திரு­ம­ண­மாகி, இரண்டு மனை­வி­கள் உள்­ள­னர். எனி­னும், குடும்­பத் தக­ராறு கார­ண­மாக இரு­வ­ரும் இவ­ரைப் பிரிந்து சென்று­விட்­டனர்.

இந்­நி­லை­யில், சமூக வலைத்­த­ளம் மூல­மாக நர­சிம்­ம­னுக்­கும் தர்­ம­பு­ரி­யைச் சேர்ந்த பத்­தாம் வகுப்பு மாணவி ஒரு­வ­ருக்­கும் பழக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் அம்­மா­ண­வி­யைச் சந்­திக்க இரு­சக்­கர வாக­னத்­தில் தர்­ம­புரி சென்­றுள்­ளார் நர­சிம்­ம­ன்.

அப்­போது 15 வயதே ஆன அம்­மா­ண­வி­யி­டம் பல்­வேறு வித­மா­கப் பேசி திரு­மண ஆசை­யைத் தூண்­டி­விட்டு, கையோடு கடத்­திச் சென்­று­விட்­டார். இதை­ய­டுத்து, காவல்­து­றை­யி­னர் அவ­ருக்கு வலை­வீ­சி­னர்.

நீண்ட தேடு­தல் வேட்­டைக்­குப் பிறகு அவரை தெலுங்­கா­னா­வில் வைத்து கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­யில், பள்ளி மாண­வியை கேரளா, ஆந்­திரா என ஐந்து மாநி­லங்­க­ளுக்கு இரு­சக்­கர வாக­னத்­தி­லேயே அழைத்­துச் சென்று அவர் உல்­லா­சம் அனு­ப­வித்­தது தெரிய வந்­தது.

அவ­ரால் சீர­ழிக்­கப்­பட்ட மாண­விக்கு எட்டு மாத கைக்­கு­ழந்தை இருப்­ப­தும் காவல்­து­றை­யி­னரை அதிர்ச்சி அடைய வைத்­தது. இதை­ய­டுத்து, போக்சோ சட்­டத்­தின் கீழ் நர­சிம்­மன் கைது செய்­யப்­பட்­டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.