பிறந்தநாள் கொண்டாடிய 119 வயது மூதாட்டி

பிறந்தநாள் கொண்டாடிய 119 வயது மூதாட்டி

1 mins read
a10e6a4c-b144-4b9f-99d4-4525da70cd4c
கிராம மக்கள், குடும்பத்தார் முன்னிலை யில் பிறந்த நாள் கேக் வெட்டிய மூதாட்டி லட்சுமி அம்மாள்.படம்: ஊடகம் -

ராம­நா­தபுரம்: ராம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் உள்ள பாப்­ப­னக்­கோட்­டை­யைச் சேர்ந்த 119 வய­தான லட்­சுமி அம்­மாள், தமது 119வது பிறந்­த­நா­ளைக் கொண்­டாடி உள்­ளார்.

இதை­ய­டுத்து, அப்­ப­குதி மக்­கள் அவ­ரி­டம் ஆசி பெற்­ற­னர். மேலும், அவ­ரது குடும்­பத்­தா­ரு­டன் இணைந்து பட்­டா­சு­களும் வெடித்­துக் கொண்­டா­டி­னர்.

20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு லட்­சுமி அம்­மா­ளின் கண­வர் கால­மா­னார். அதன் பின்­னர் தனது இரண்டு மகன்­கள், ஒரு மக­ளுடன் வாழ்ந்து வரு­கி­றார். இவ­ரது பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்­தி­க­ளின் எண்­ணிக்கை ஐம்பதைக் கடந்து­விட்­டது. தள்­ளாத வய­தி­லும் தின­மும் அதி­காலை ஐந்து மணிக்­கெல்­லாம் தூங்கி எழுந்து, மாடு­க­ளைப் பரா­ம­ரிப்பது உள்ளிட்ட வீட்டு வேலை­களை முடிந்த அள­வுக்­குச் செய்­கி­றார் லட்­சுமி அம்மாள். இது­வரை அவரை எந்த நோயும் தாக்­கி­ய­தில்லை. கேழ்­வரகு, கம்பு போன்ற தானிய உணவு வகைகளை மட்­டும் சாப்­பி­டு­கி­றார்.