திருவள்ளுவருக்குக் கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்

திருவள்ளுவருக்குக் கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்

1 mins read
3578b12e-5951-46a4-a8c4-03b4a6533105
கோவிலில் திருவள்ளுவர் சிலை. படம்: ஊடகம் -

பர்­கூர்: தமி­ழ­கத்­தின் பர்­கூர் தொகுதி மக்­கள் திரு­வள்­ளு­வ­ருக்கு கோவில் கட்டி வழி­பட்டு வரு­கின்­ற­னர்.

அண்­மை­யில் திரு­வள்­ளு­வர் தினத்­தை­யொட்டி அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த பள்ளி மாண­வர்­க­ளுக்கு திருக்­கு­றள் ஒப்­பு­வித்­தல், கட்­டுரை, பேச்­சுப் போட்­டி­களும் பெண்­க­ளுக்கு கோலப் போட்­டி­யும் நடை­பெற்­றன. வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்கு பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

பர்­கூர் அடுத்­துள்ள ஜிஞ்­சம்­பட்­டி­யில் திரு­வள்­ளு­வர் தொண்டு அறக்­கட்­டளை தொடங்­கப்­பட்­டுள்­ளது. மேலும், அப்­ப­குதி மக்­கள் ஒருங்­கி­ணைந்து திரு­வள்­ளு­வர் நலச் சங்­க­மும் அமைத்­துள்­ள­னர். இந்­தச் சங்­கத்­தின் சார்­பா­கவே திரு­வள்­ளு­வ­ருக்கு கோவில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­வள்­ளு­வரை மூல­வ­ரா­கக் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்ள இக்­கோ­வி­லில், சிறப்பு பூசை­கள் செய்து கிராம மக்­கள் வழி­ப­டு­கின்­ற­னர். சுற்றுவட்டார கிராம மக்களும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.