காளை வளர்க்கும் சினேகா

1 mins read
5ca22d29-2142-49cb-8285-c6b4d5ed2408
-

மதுரை: மது­ரை­யைச் சேர்ந்த 16 வய­தான சினேகா (படம்) என்ற இந்­தச் சிறுமி ஜல்­லிக்­கட்டு காளை­க்குப் பயிற்சி அளிக்­கி­றார்.

இந்த ஆண்டு இவர் பயிற்சி அளித்த காளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்­கேற்­றுள்­ளது.

"சிறு வய­தி­லேயே ஜல்­லிக்­கட்­டுக்­காக நடை­பெற்ற போராட்­டத்­தைப் பார்த்­த­தால் அதன்­பால் ஒரு பிடிப்பு ஏற்­பட்­டது. அப்­பா­தான் காளை மாடு வாங்­கிக்­கொ­டுத்­தார். அதைப் பாசத்­து­டன் வளர்த்து வரு­கி­றேன்," என்­கி­றார் சினேகா.

வாரத்­தில் இரு­முறை தன் காளை மாட்­டுக்குப் பயிற்சி அளிப்­ப­தா­கச் சொல்­ப­வர், இது மிக கடி­ன­மான பணி என்­கி­றார்.