தமிழக ஊர்தி நிராகரிப்பு: வ.உ.சி. கொள்ளுப்பேத்தி வருத்தம்

தமிழக ஊர்தி நிராகரிப்பு: வ.உ.சி. கொள்ளுப்பேத்தி வருத்தம்

2 mins read
4b75e783-089b-40e8-b78a-884d3bd47a57
வ.உ.சி. கொள்ளுப்பேத்தி செல்வி. படம்: ஊடகம் -

சென்னை: குடி­ய­ரசு தின விழா அணி­வ­குப்­பில் தமி­ழ­கத்­தின் சார்­பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊர்தி நிரா­க­ரிக்­கப்­பட்­டது சுதந்­திரப் போராட்ட வீரர்­க­ளின் வாரி­சு­கள், தமி­ழக மக்­க­ளின் உணர்­வு­களை வேதனை அடையச் செய்­துள்­ள­தாக வ.உ.சி.யின் கொள்­ளுப் பேத்தி செல்வி தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய விடு­த­லைக்­காக போரா­டிய சுதந்­திர போராட்ட வீரர்­க­ளின் தியா­கங்­கள், அவர்­க­ளது வர­லா­று­களை பற்றி அடுத்த தலை­மு­றை­யி­ன­ரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"மத்­திய அரசு இதனை மன­திற்­கொண்டு முடி­வெ­டுக்க வேண்­டும். சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­க­ளின் புகைப்­ப­டங்­கள், வர­லாறு அடங்­கிய ஊர்­தி­கள் ஆண்­டாண்டு கால­மாக குடி­ய­ரசு தின அணி­வ­குப்­பில் இடம்­பெற்று வரு­கின்றன," என்று செல்வி கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கம் சார்பில் அணி­வ­குப்­பில் பங்­கேற்க இருந்த ஊர்தியில் நாடு முழு­வ­தும் அறி­யப்­பட்ட சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­கள் இல்லை எனக் கூறி நிரா­க­ரிக்கப்பட்­ட­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார். இது­தொ­டர்­பாக பிர­த­மர் மோடிக்கு எழு­தி­யுள்ள கடி­தம் ஒன்­றில், "நாட்­டுக்­குச் சேவை­யாற்­றிய நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்­தி­ர­நாத் தாகூர் ஆகி­யோ­ரின் சிறப்­பம்­சங்­க­ளு­டன் மாநில அரசு அலங்­கார ஊர்தியை தயார் செய்து இருந்­தது," என்று குறிப்­பிட்­டுள்­ளார். இதே­போல் கேரள அர­சின் ஊர்தியில் சங்­க­ராச்­சா­ரி­யா­ரின் வாழ்க்கை வர­லாறு இடம்­பெறாததால் நிராகரிக்கப்பட்டதாக அம்­மா­நில கல்வி அமைச்­சர் சிவன்­குட்டி தெரி­வித்­துள்­ளார்.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது வேதனை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவதற்கு மத்திய அரசு மறுத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக மாநில அதிகாரிகள் மூன்று முறை விளக்கம் அளித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.