கோவை: கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அங்குள் தொற்றுப் பாதிப்பு 40 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
அங்கு தற்போது நாள்தோறும் பத்தாயிரம் பேருக்கு தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் 18 விழுக்காட்டினருக்கு தொற்றுக்கான லேசான அறிகுறிகளாவது தென்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் பொறுப்புடன் செயல்படாவிட்டால் இது 40 விழுக்காடாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
"கடந்த இரண்டாவது அலையின் போது அதிகபட்சமாக 4,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்போது அதைவிட அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவதால், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மருத்துவ உயிர்வாயு, மருந்துகள், மருத்துவக் கருவிகள் ஆகியன தயார் நிலையில் உள்ளன," என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

