திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த சாயம் பூசும் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரிச் சீட்டு வாங்கிய சில மணி நேரங்களில் ரூ.12 கோடி முதல் பரிசாகக் கிடைத்துள்ளது.
கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சதானந்தன் என்ற அந்த ஆடவர் கடந்த 50 ஆண்டுகளாக கட்டடங்களுக்கு சாயம் பூசும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிமை இறைச்சி வாங்க சென்றவர், சந்தையில் லாட்டரிச் சீட்டு விற்கப்படுவதைப் பார்த்து, தானும் ஒரு சீட்டை வாங்கியுள்ளார். அந்தச் சீட்டுக்குதான் முதல் பரிசு விழுந்துள்ளது.
"சந்தையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களுக்குள் குலுக்கல் நடந்துள்ளது. மிக விரைவாக அதன் முடிவுகள் தெரிந்துவிட்டது.
"பரிசுத் தொகையைக் கொண்டு எனது இரண்டு மகன்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவேன்," என்று செய்தியாளர்களிடம் பேசும்போது சதானந்தன் தெரிவித்தார்.