குடியரசு தின விழா: டெல்லியில் இடம் இல்லை; சென்னை அணிவகுப்பில் தமிழக ஊர்தி

குடியரசு தின விழா: டெல்லியில் இடம் இல்லை; சென்னை அணிவகுப்பில் தமிழக ஊர்தி

2 mins read
f633bd73-9a07-4477-92f6-906665b73d26
-

சென்னை: குடி­ய­ரசு தினத்­தை­யொட்டி, டெல்­லி­யில் நடை­பெற உள்ள அணி­வ­குப்­பில், தமி­ழக அலங்­கார ஊர்தி பங்­கேற்க அனு­மதி மறுக்­கப்­பட்ட நிலை­யில், அந்த ஊர்தி சென்­னை­யில் நடை­பெ­றும் அணி­வ­குப்­பில் இடம்­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், ஆங்­கி­லே­யர்­க­ளைத் தீர­மு­டன் எதிர்­கொண்ட தமி­ழக சுதந்­தி­ரப் போராட்ட வீரர்­க­ளின் பங்­க­ளிப்­பைப் பறை­சாற்­றும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்ட அலங்­கார ஊர்தி டெல்லி குடி­ய­ரசு தின அணி­வ­குப்­பில் கலந்து கொள்­வ­தற்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த நிலை­யில் நாட்­டுப்பற்றி­லும் விடு­தலை வேட்­கை­யி­லும் தமிழ்­நாட்­டின் உணர்வை வெளிப்­படுத்­தும் வித­மாக மாநில அர­சின் சார்­பில் நடை­பெ­றும் குடி­ய­ரசு தின கொண்­டாட்­டத்­தில் அந்த அலங்­கார ஊர்தி இடம்­பெ­றும் என்று தமிழக முதல்வர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், தமி­ழ­கத்­தின் முக்­கிய நக­ரங்­க­ளுக்­கும் அந்த அலங்­கார ஊர்தி மக்­க­ளின் பார்­வைக்­காக அனுப்­பப்­படும் என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக தாம் பிர­த­மர் மோடிக்கு எழு­திய கடி­தத்­துக்குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில், மத்­திய பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தமக்கு கடி­தம் அனுப்பி உள்­ள­தா­க­வும் அதில் தமி­ழக ஊர்­திக்கு வாய்ப்பு மறுக்­கப்­பட்­ட­தற்கு எந்த கார­ணங்­களும் குறிப்­பி­டா­தது தமக்கு அதிர்ச்­சி­யை­யும் வருத்­தத்­தை­யும் அளித்­துள்­ளது என்­றும் முதல்­வர் கூறி­யுள்­ளார்.

"இந்­தி­யா­வின் வேறு எந்த மாநி­லத்­திற்­கும் சற்­றும் சளைக்காத வகை­யில், விடு­த­லைப்­போ­ரில் தமிழ­கம் செய்த 250 ஆண்டு காலத் தொடர் பங்­க­ளிப்பு சுதந்­தி­ரப் போராட்ட வர­லாற்­றில் மிக முக்­கி­ய­மா­ன­தா­கும்.

"ஆங்­கி­லே­யர்­க­ளின் வணிகத்­திற்குப் போட்­டி­யாக, சுதேசி கப்­பல் கம்­பெனி எனும் பெரும் கனவை நெஞ்­சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்­தை­யும் இழந்து, ஆங்­கி­லேய அடக்­கு­மு­றைக்கு எதி­ரா­கச் செயல்­பட்டு இரட்­டைத் தீவாந்­திர தண்­டனை பெற்­ற­வர் வ.உ.சிதம்­ப­ர­னார்.

"ஆங்­கி­லேய ஏகா­தி­பத்­தி­யத்­திற்கு எதி­ரா­கத் தனது வீர­மிக்க கவி­தை­க­ளால் விடு­தலை வேள்வி செய்­த­வர் பார­தி­யார். இத்­த­கைய விடு­த­லைப் போராட்­டத் தியா­கி­க­ளின் பங்­க­ளிப்பை நினை­வு­கூ­ரும் வித­மா­கத்­தான் நமது அலங்­கார ஊர்தி வடி­வ­மைக்­கப்­பட்டு இருந்­தது," என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, தமி­ழக ஊர்தி குடி­ய­ரசு தின அணி­வ­குப்­பில் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­தற்கு இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி மாநில செய­லா­ளர் முத்­த­ர­சன் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். பார­திய ஜனதா ஆட்சி செய்­யாத மாநி­லங்­க­ளின் ஊர்­தி­கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு இருப்­பது ஜன­நா­ய­கத்­திற்கு நல்­லது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.