திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

1 mins read
7ff6da4f-9d90-4d18-a453-66e4b5925877
மன்னர் திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்த சீர்வரிசைப் பொருள்கள் எடுத்து வந்தனர். படம்: தமிழக ஊடகம் -

மதுரை: விஜ­ய­ந­க­ரப் பேர­ர­சர் மன்­னர் திரு­மலை நாயக்­க­ரின் 439ஆவது பிறந்த நாள் விழா நேற்று முன்­தி­னம் மது­ரை­யில் சிறப்­பாக நடை­பெற்­றது.

மதுரை திரு­மலை நாயக்­கர் மண்­ட­பத்­தில் நடை­பெற்ற விழா­வில் மாமன்­னர் திரு­மலை நாயக்­கர் சிலைக்கு மங்­கல இசை­யு­டன் சீர்­வ­ரிசை கொண்­டு­வ­ரப்­பட்­டது. பின்­னர் பால், சந்­த­னத்­தைக் கொண்டு பூசை நடத்­தப்­பட்­டது.

குறிப்­பாக, பண்­டைய கால முறைப்­படி மன்­னர்­க­ளுக்கு வழங்­கப்­படும் மரி­யா­தை­கள் செய்­யப்­பட்டு மாமன்­னர் திரு­மலை நாயக்­கர் சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.

டெல்லி சுல்­தான், முக­லாய மன்­னர்­கள் தமி­ழ­கத்தை நோக்கிப் படை­யெ­டுத்து வந்­த­போது, அவர்­க­ளின் படை­களைத் துணிச்­ச­லு­டன் எதிர்­கொண்டு விரட்­டி­ய­டித்து வர­லாற்­றில் இடம்­பெற்­ற­வர் திரு­மலை நாயக்­கர்.

மது­ரையைத் தலை­ந­க­ராகக் கொண்டு ஆட்சி புரிந்த விஜ­ய­ந­க­ரப் பேர­ர­சர்­களில் ஆகச்­சி­றந்த இடத்­தைப் பெற்­ற­வர் மாமன்­னர் திரு­மலை நாயக்­கர். கி.பி. 1623 முதல் 1659ஆம் ஆண்டு வரை கால் நூற்­றாண்­டு­க­ளுக்­கும் மேலாக தனது ஆளு­கைக்கு கீழ் அனைத்­துப் பகு­தி­க­ளை­யும் கட்­டிக்­காத்தவர் இவர் என்று நிகழ்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.