சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 170,000ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக 26,981 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் ஒன்பதாயிரம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று பாதித்த 94 விழுக்காட்டினர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3,787 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 9,237 தெருக்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,
தமிழகத்தில் மொத்தமுள்ள 1.21 லட்சம் குக்கிராமங்களில் 24 ஆயிரத்துக்கும் மேலான கிராமங்களில் தொற்று பாதிப்புள்ளது என்றார்.
நகரங்களில் 1.27 லட்சம் தெருக்களில் 28 ஆயிரத்துக்கும் மேலான தெருக்களில் தொற்று இருக்கிறது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 600 மையங்களில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.