ஸ்டாலின்: ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வு

சென்னை: தமி­ழின் தொன்­மை­யை­யும் தமி­ழ­ரின் பண்­பாட்­டை­யும் அறி­வி­யல்­பூர்­வ­மாக நிறுவ வேண்­டு­மா­னால் முறை­யான அக­ழாய்­வு­கள் அவ­சி­யம் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தில் ஏழு இடங்­களில் தொல்­லி­யல் அக­ழாய்­வு­கள், சங்­க­கால கொற்­கைத் துறை­மு­கத்­தினை அடை­யா­ளம் காண முன்­க­ளப் புல ஆய்வு நடத்­தப்­படும் என அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கீழடி அக­ழாய்வு மற்ற அக­ழாய்­வு­க­ளுக்கு முன்­னோடி அக­ழாய்­வா­கத் திகழ்­கிறது என்­றும் கி.மு. ஆறாம் நூற்­றாண்­டி­லேயே தமி­ழர் வாழ்ந்த பகு­தி­களில் நக­ர­ம­ய­மாக்­கம் ஏற்­பட்­டி­ருந்­தது என்­பது மட்­டு­மல்­லா­மல், படிப்­ப­றி­வும் எழுத்­த­றி­வும் பெற்ற மேம்­பட்ட சமூ­க­மாக விளங்­கி­யதை கீழடி அக­ழாய்வு நிலை­நி­றுத்­தி­யுள்­ளது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

பண்­டைத் தமிழ்ச் சமூ­கத்­தின் தொன்மை, பண்­பாடு மற்­றும் விழு­மி­யங்­க­ளுக்­குப் பெருமை சேர்க்­கும் வகை­யில் தற்­போது 2022ஆம் ஆண்­டில் ஏழு இடங்­களில் அக­ழாய்­வு­கள் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக குறிப்­பிட்டு முதல்­வர், அந்த இடங்­க­ளை­யும் அறி­வித்­துள்­ளார்.

அதன்­படி, கீழடி, அத­னைச் சுற்­றி­யுள்ள கொந்­தகை, அக­ரம், மண­லூர் பகு­தி­களில் அக­ழாய்வு நடை­பெ­றும்.

தூத்­துக்­குடி மாவட்­டம் சிவ­க­ளை­யில் மூன்­றாம் கட்ட ஆய்வு, அரி­ய­லூர் மாவட்­டம் கங்­கை­கொண்ட சோழ­பு­ரத்­தில் இரண்­டாம் கட்ட ஆய்வு, கிருஷ்­ண­கிரி மாவட்­டம் மயி­லா­டும்­பா­றை­யில் இரண்­டாம் கட்ட ஆய்வு நடை­பெ­றும் என முதல்­வர் ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.

இதே போல், வெம்­பக்­கோட்டை (விரு­து­ந­கர்), துலுக்­கர்­பட்டி (திரு­நெல்­வேலி), பெரும்­பாலை (தர்­ம­புரி) ஆகிய மூன்று இடங்­க­ளி­லும் முதல் கட்ட ஆய்வு நடை­பெ­றும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அக­ழாய்­வுப் பணி­கள் வரும் பிப்­ர­வரி மாதம் முதல் வாரத்­தில் தொடங்கி செப்­டம்­பர் மாதம் இறுதி வரை நடை­பெற உள்­ளது என்­றும் இதற்­காக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் குறிப்­பிட்­டுள்ள அவர், இதன் மூலம் சங்க காலக் கொற்­கைத் துறை­மு­கத்­தினை அடை­யா­ளம் காண முன்­க­ளப் புல ஆய்­வுப் பணி­களும் மேற்­கொள்­ளப்­படும் எனக் கூறி­யுள்­ளார்.

"இந்­தி­யத் துணைக்­கண்­டத்­தின் வர­லாறு, இனி தமிழ் நிலப்­ப­ரப்­பி­லி­ருந்­து­தான் தொடங்கி எழு­தப்­பட வேண்­டும் என்­ப­தைச் சான்­று­க­ளின் அடிப்­ப­டை­யில் அறி­வி­யல்­பூர்­வ­மாக நிறு­வ வேண்டும்.

"அதற்கு மேற்குறிப்பிட்ட அக­ழாய்­வு­களும், முன்­கள புல­ஆய்­வுப் பணி­க­ளின் முடி­வு­களும் உறுதி செய்­யும்," என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!