கும்பகோணம்: அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன்னாலான சிலையை வடிக்கும் பணி கும்பகோணத்தில் உள்ள சிற்பக் கூடத்தில் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பிபின் ராவத்தின் தீரத்தைப் போற்றும் வகையில், 120 கிலோ எடை கொண்ட அவரது மார்பளவு ஐம்பொன் சிலை டெல்லியில் உள்ள ராணுவப் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நிறுவ உள்ளதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள சிற்பக் கூடத்தில் முதல்கட்டமாக களிமண்ணாலும் அதன்பின்னர் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகிய ஐம்பொன்னைக் ெகாண்டும் அவரது சிலையை வடிவமைக்க உள்ளனர். பிப்ரவரி 2வது வாரத்தில் இப்பணிகள் நிறைவுபெறும்.