மீனவர்களுக்கு ரூ.5.66 கோடி நிவாரணம் அறிவிப்பு

மீனவர்களுக்கு ரூ.5.66 கோடி நிவாரணம் அறிவிப்பு

1 mins read
3606c1fb-8cc3-44b5-9cb9-38346b34b481
-

சென்னை: இலங்கை அர­சால் பறி­மு­தல் செய்­யப்­பட்ட 125 படகு­ உரி­மை­யா­ளர்­களின் வாழ்­வா­தாரத்தைப் பாது­காக்­கும் வகை­யில், அவர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வித்­துள்­ளார்.

குறிப்­பாக, இலங்கை அர­சாங்­கத்­தால் பறி­மு­தல் செய்­யப்­பட்டு, தற்­போது இலங்­கை­யில் பயன்­படுத்த இய­லாத நிலை­யி­லுள்ள 125 தமி­ழ­கப் படகு உரி­மை­யா­ளர்­களுக்கு ரூ.5 கோடியே 66 லட்­சம் நிதி வழங்­கப்­படும். 108 விசைப்­படகு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தலா ரூ.5 லட்­சம் வீத­மும் 17 நாட்­டுப்­படகு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தலா ரூ.150,000 வீத­மும் வழங்­கப்­படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் முத­ல்வரைச் சந்­தித்த மீனவச் சங்­கப் பிர­தி­நி­தி­கள், மீன­வர்­க­ளுக்கு இலங்­கை­யால் ஏற்­படும் இன்­னல்­க­ளைப் பற்­றி­யும் அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் குறித்த பிரச்­சி­னை­க­ளை­யும் எடுத்­து­ரைத்­த­னர். மீன­வர்­கள் சார்­பாக பல்­வேறு கோரிக்­கை­களையும் முன்வைத்த நிலையில், பறி­மு­தல் செய்­யப்­பட்ட படகு உரி­மை­யா­ளர்­களுக்கு இழப்­பீடு வழங்­கப்­படுவதாக முதல்வர் அறிவித்­துள்­ளார்.