ஆனைமலை: அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், 'இல்லம் தேடி நூலகம்' எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். அவர், மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று புத்தகங்களை விநி யோகித்து, அவர்களது வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார். ஆசிரியரின் இம்முயற்சியைப் பலரும் வரவேற்றுள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலை அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழா சிரியராகப் பணியாற்றி வருகிறார் பாலமுருகன், 45.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ள இவர், வீட்டில் உள்ள மாணவர்கள் தங்களது நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவழிக்கவும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் 'இல்லம் தேடி நூலகம்' திட்டத்தைத் தொடங்கி, மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்கி வருகிறார்.
இதுகுறித்து பாலமுருகன் கூறுகையில், "மாணவர்களின் வாழ்க்கை வளமாக அமைய சிந்தனைத் திறன், வாசித்தல் திறன் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு அரசின் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தைப் போல் 'இல்லம் தேடி நூலகம்' திட்டத்தை உருவாக்கினேன். சேகரிக்கப்பட்ட நுால்கள், பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்கே இரு சக்கர வாகனத்தில் சென்று வழங்குகிறேன். மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிக்கின்றனர்," என்றார்.