'மாணவி உயிரிழப்பை அரசியலாக்காதீர்'

'மாணவி உயிரிழப்பை அரசியலாக்காதீர்'

1 mins read
6a4d5363-066f-41cb-a95f-ad0509ebbf5b
மாணவி மரணம் குறித்து வாக்குமூலம் அளிக்க வந்த பெற்றோர். படம்: ஊடகம் -

தஞ்சாவூர்: தஞ்சை மாணவி தனது உயிரை மாய்த்­துக்­கொண்ட விவ­கா­ரத்தை யாரும் அர­சி­ய­லாக்க வேண்­டாம் என்று தமி­ழக பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

பல்­வேறு அமைப்­பு­களும் குற்­றம்­சாட்­டு­வ­து­போல், விசா­ர­ணை­யின்­போது யாரும் மத­மாற்ற குற்­றச்­சாட்டை சொல்­ல­வில்லை.

எனி­னும், இந்­தக் குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் இப்­பள்­ளி­யில் படித்து தேர்ச்சி பெற்ற மாண­வர்­க­ளி­ட­மும் தற்­போது படித்­துக்­கொண்­டி­ருக்­கும் மாண­வர்­க­ளி­ட­மும் கருத்­து­கள் கேட்­கப்­பட்டு வரு­கின்­றன என்று அமைச்­சர் சொன்­னார்.

சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று காலை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. கார­ணம் எது­வாக இருந்­தா­லும் குற்­றம் செய்­த­வர்­கள் யாராக இருந்­தா­லும் தங்களது தண்டனையில் இருந்து தப்பமுடியாது. காவல்­துறை விசா­ரணை மட்­டு­மின்றி பள்­ளிக் கல்­வித் துறை சார்­பி­லும் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

"பள்­ளி­களில் மதம், இனம் என எந்த ஒரு பாகு­பா­டு­ம் இருக்­கக்­கூடாது என­வும் அவ்­வாறு இருப்­பது தெரி­ய­வந்­தால் கடும் நட­வ­டிக்கை எடுக்கப்­படும்," எனவும் அன்­பில் மகேஷ் எச்­ச­ரித்­துள்­ளார்.

இதற்கிடையே, மாணவியின் தந்தையும் அவரது இரண்டாவது மனைவியும் தஞ்சாவூர் ஒருங் கிணைந்த நீதிமன்றத்துக்குள் சென்றதும் நுழைவாயில் மூடப் பட்டது. வழக்கறிஞர்கள், பத்திரி கையாளர்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தஞ்சாவூர் நீதித்துறையின் நடுவர் பாரதி முன்னிலையில் பெற்றோர் இருவரும் தனித்தனி யாக முன்னிலையாகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இரண்டரை மணி நேரம் காெணாளியாகப் பதிவான வாக்குமூலம் முத்திரையிடப்பட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒப்படைக்கப்பட்டது.