சென்னை: கொரோனா தொற்றுப் பரவலின் மூன்றாவது அலை அடுத்த இரு வாரங்களில் உச்சம் அடையும் என்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கூறியுள்ளது.
இந்தியாவில் டெல்டா, ஓமிக்ரான் வகை கிருமிப் பரவலால் மூன்றாவது அலை தீவிரமடைந்து வருகிறது.
இந்த அலை எப்போது உச்சம் அடையும் என்பது தொடர்பாக சென்னை ஐஐடியின் கணிதவியல் துறையும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணித அடிப்படையில் பகுப்பாய்வு செய்து விவரம் வெளி யிட்டுள்ளன.
தற்போது, 'ஆர் வேல்யூ' என்று சொல்லப்படும் கொரோனா மொத்த பரவல் விகிதம் 1.57% விழுக்காடாக இருப்பதாகவும் அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் இருந்து பெறப்பட்ட பரவல் விகித தரவுகளும் 'ஆர் வேல்யூ' உச்சமடையும் என்பதையே உணர்த்துவதாகவும் ஐஐடி குறிப்பிட்டுள்ளது.
தங்களது கணக்கீட்டின்படி, கொரோனா தொற்று பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் உச்சமடையும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐஐடி கணிதத்துறை பேராசிரியர் டாக்டர் ஜெயந்த் ஜா கூறுகையில், ''மும்பை, டெல்லி மாநகரங்களில் ஒரு கொரோனா நோயாளி மற்றவர்களுக்கு தொற்றைப் பரப்பும் விகிதமானது அங்கு கொரோனா உச்சமடைந்து சமூகப் பரவலாகி வருவதைக் காட்டுகிறது. அதேநேரத்தில் சென்னையில் இது இன்னும் 1க்கு அருகிலேயே உள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.
பரவலாக குறைந்தால்தான் பயன்
இதற்கிடையே, "மாநிலத்தில் கிருமிப் பரவலால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்பாதிப்பு மாநிலம் முழுவதும் மேலும் குறையத் தொடங்கினால், இனி ஞாயிறன்று முழு ஊரடங்குக்கு தேவை இருக் காது. அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சற்று குறைந்த பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய தினத்தில் இருந்த 30,744 என்ற எண்ணிக்கையைக் காட்டி லும் சற்று குறைவாகும்.
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 37,218 ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது அலை வேகமாக உச்சம் தொட்ட சென்னையில் மேலும் 6,383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது.
"தமிழகத்தில் மூன்றாம் அலை பாதிப்பு தற்போது குறைந்து வருவதுடன் உயிரிழப்பும் தற்போது 10 மடங்கு குறைந்துள்ளது," என சுகாதாரச் செயலாளர் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

