சென்னை: சேதமடைந்த 20,000 வீடுகளை இடிக்க பரிந்துரை

சென்னை: சேதமடைந்த 20,000 வீடுகளை இடிக்க பரிந்துரை

2 mins read
26debee8-32f6-42ec-adcd-c49f08686dd6
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகள். கோப்புப்படம்: தகவல் ஊடகம் -

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கை அளித்தது நிபுணர் குழு

சென்னை: பொது­மக்­க­ளின் பாது­காப்பு கருதி சென்­னை­யில் சேத­ம­டைந்த நிலை­யில் உள்ள சுமார் 20 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­பு­கள் இடிக்­கப்­பட உள்­ளன. அரசு அமைத்­துள்ள வல்லு­நர் குழு இதற்­கான பரிந்­து­ரையை அளித்­துள்­ளது.

தமி­ழக அரசு இதை ஏற்­கும் பட்­சத்­தில் 20,453 குடி­யி­ருப்­பு­கள் இடிக்­கப்­படும் என ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

கடந்த ஆண்டு டிசம்­பர் 27ஆம் தேதி­யன்று சென்னை திரு­வொற்றி­யூர் பகு­தி­யில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்­ட­டம் திடீ­ரென இடிந்து விழுந்­தது. இதில் 24 வீடு­கள் தரை­மட்­டம் ஆயின. இத­னால் அப்­ப­குதி மக்­கள் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர். அந்­தக் குடி­யி­ருப்­பில் உள்ள 336 வீடு­களில் சுமார் இரண்­டா­யி­ரம் பேர் வசித்து வந்­த­னர்.

எனி­னும், கட்­ட­டத்­தின் பல்­வேறு பகு­தி­களில் பெரிய அள­வி­லான விரிசல்­கள் ஏற்­ப­டவே, பல­ரும் அச்ச­ம­டைந்­த­னர். அதன் எதி­ரொ­லி­யாக ஏரா­ள­மா­னோர் அங்கு வசிப்­பது ஆபத்து எனக் கருதி, முன்­கூட்­டியே அங்­கி­ருந்து வெளி­யே­றி­விட்­ட­னர்.

இத­னால் கட்­ட­டம் இடிந்து விழுந்­தற்­போது யாரும் உயிரிழக்க­வில்லை. டிசம்­பர் மாதம் 24 வீடு­கள் மட்­டுமே இடிந்­து­வி­ழுந்­தன. இதை­ய­டுத்து, அங்­குள்ள மற்ற கட்­ட­டங்­களை ஆய்வு செய்ய முடி­வா­னது. அந்­தக் கட்­ட­டங்­களில் சுமார் 17,734 வீடு­கள் உள்­ளன.

இந்­நி­லை­யில், தமிழ்­நாடு நகர்ப்­புற வசிப்­பிட மேம்­பாட்டு வாரியத்தின் (குடிசை மாற்று வாரி­யம்) மேலாண்மை இயக்­கு­நர் எம்.கோவிந்­த­ராவ் பொது­மக்­க­ளின் பாது­காப்பு, அவ­சர நிலை கருதி, ஐந்து தொழில்­நுட்ப மதிப்­பீட்டு குழுக்­களை நிய­மித்­தார்.

அதன் பின்­னர் அண்ணா பல்­க­லைக்­க­ழக மண்­ணி­யல், கட்­ட­ட­வி­யல் குழு அக்­கு­றிப்­பிட்ட கட்­டடப் பகு­தி­களில் ஆய்வு மேற்­கொண்­ட­னர். கட்­டட இடி­பா­டு­களில் இருந்து பெறப்­பட்ட மணல் மாதிரி ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் முடி­வில் தமி­ழக அர­சி­டம் ஆய்­வ­றிக்கை அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதில், சென்­னை­யில் சேத­ம் அடைந்த நிலை­யில் உள்ள 20,453 வீடு­களை இடிக்க வேண்­டும் என்­றும் தேவைப்­பட்­டால் மறு­கட்டு­மா­னம் மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து நகர்ப்­புற வாழ்விட மேம்­பாட்டு வாரி­யம் விரை­வில் முடி­வெ­டுக்­கும் எனத் தெரி­கிறது.