தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

1 mins read
792533ce-6514-47ce-a629-48244069bc28
-

சென்னை: டெல்­லி­யில் நடை­பெற உள்ள குடி­ய­ரசு தின அணி­வ­குப்பில் தமி­ழக அலங்­கார ஊர்தி பங்­கேற்க அனு­மதி வழங்க உத்­த­ர­விட வலியு­றுத்தி தாக்­கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்தது.

இந்த ஆண்டு நேரப்­பற்­றாக்­குறை, பாது­காப்பு பிரச்­சினை கார­ண­மாக டெல்லி குடி­ய­ரசு தின அணி­வ­குப்­பில் 12 அலங்­கார ஊர்­தி­கள் மட்­டுமே பங்­கேற்­கும் என பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, தமி­ழக அலங்­கார ஊர்தி இந்த அணி­வ­குப்­பில் பங்­கேற்­காது என அறி­விக்­கப்­பட்­டது.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஊர்திக்கு அனுமதி அளிக்கும்படி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

எனினும் அவரது இந்த கோரிக்கை மத்திய அரசால் ஏற்கப்படவில்லை.

இத­னால் தமி­ழக மக்­க­ளின் உணர்­வு­கள் புண்­பட்­டுள்­ள­தா­க தமது மனு­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார் சென்­னையை சேர்ந்த பி.பாபு.

இந்த வழக்கு நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்கு வந்­த­போது, அலங்­கார ஊர்­திக்கு அனு­மதி கோரிய விண்­ணப்­பம், நிரா­க­ரித்த உத்­த­ரவு நகல் உள்­ளதா என நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­னர்.

அதற்கு எழுத்­து­பூர்­வ­மான உத்­த­ரவு ஏதும் பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்று குறிப்­பிட்ட மனு­தா­ரர் தரப்பு, இது தொடர்­பாக மத்­திய அர­சுக்கு தமி­ழக முதல்­வர் கடி­தம் அனுப்­பி­ய­தா­கத் தெரி­வித்­தது.

எனி­னும், இதை ஏற்க மறுத்த நீதி­ப­தி­கள், உரிய ஆவ­ணங்­கள் இல்லை என்­ப­தா­லும் கடைசி நேரத்­தில் வழக்கு தொடுத்­துள்­ள­தால் நீதி­மன்­றம் இதில் தலை­யிட இய­லாது என்­றும் கூறி பாபு­வின் மனுவை தள்­ளு­படி செய்­த­னர்.