சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் 33 மாவட்டங்களில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை குறைவாகப் பதிவாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை புதிதாக 30,055 பேருக்கு கிருமி தொற்றியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் இப்போது அது குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக சென்னையில் 6,241 பேரும் செங்கல்பட்டில் 1,737 பேரும் கோவையில் 3,763 பேரும் கன்னியாகுமரியில் 1,217 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த நால்வருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 12 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 1,012 சிறார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 10,088 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா, ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

