சென்னை: பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'டிரோன்' எனப்படும் ஆளில்லா வானூர்திகளை வடிவமைப்பதில் இந்த வான்வழி வாகனக் கழகம் கவனம் செலுத்தும் என்றார்.
"தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் உள்ள அரசு துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இப்போது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. தமிழக அரசு தொடங்கி உள்ள புதிய கழகம் அனைத்து தரப்பினருக்கும் உறுதுணையாக இருக்கும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தின் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு புதிய வான்வழி வாகனக் கழகம் முன்மாதிரியாக அமைவதாகவும் அவர் கூறினார்.

