இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்கும் தமிழக ஆளுநர்: சாடும் வைகோ

இந்தி மொழிக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்கும் தமிழக ஆளுநர்: சாடும் வைகோ

2 mins read
29503c2c-ef87-40f4-b79b-7fa5158d679f
-

சென்னை: தமி­ழக மாண­வர்­கள் இன்­னொரு மொழியைக் கற்க வேண்­டும் என்று தமி­ழக ஆளு­நர் இந்தி மொழிக்கு மறை­மு­க­மாக வக்­கா­லத்து வாங்­கு­வ­தை­யும் மும்­மொழிக் கொள்­கைக்கு ஆத­ர­வான அறிவுறுத்­தலை வழங்கி இருப்­ப­தை­யும் பொறுத்­துக்கொள்ள முடி­யாது என்று மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ தெரி­வித்­துள்­ளார்.

காலஞ்­சென்ற முதல்­வர் அண்ணா சட்­டப்­பே­ர­வை­யில் நிறை­வேற்­றிய இரு­மொ­ழிக் கொள்கை தீர்­மா­னத்தை அரை நூற்­றாண்டு கால­மாக தமி­ழ­கம் கடைப்­பி­டித்து வரு­வ­தாக அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும், குடி­ய­ரசு தினத்­தை­யொட்டி தமி­ழக ஆளு­நர் ஆர்.என்.ரவி விடுத்­தி­ருந்த வாழ்த்­துச் செய்­தி­யில் 'நீட்' தேர்வு அவ­சி­யம் என்று பொருள்­ப­டும்­படி மேலோட்­ட­மாக சுட்­டிக்­காட்டி இருப்­பதை ஏற்க இய­லாது என்­றும் வைகோ கூறியுள்­ளார்.

"தமி­ழக முதல்­வர் நேரில் சென்று வலி­யு­றுத்­தி­யும்­கூட 'நீட்' தேர்வு விலக்கு சட்ட முன்­வ­ரை­வுக்கு ஆளு­நர் இசைவு அளித்து மத்­திய அர­சின் பரிந்­து­ரைக்கு அதை அனுப்­ப­வில்லை.

"அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் கீழ் இயங்­கும் ஆளு­நர், மக்­க­ளால் தேர்ந்து எடுக்­கப்­பட்ட மாநில அர­சின் உரி­மை­கள், கட­மை­க­ளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறா­மல் தமது பணி­களை நிறை­வேற்ற வேண்­டும்.

"ஆனால், ஆளு­ந­ரின் அறிக்கையை முழு­மை­யாக, ஆழமாக உள்­வாங்­கி­னால்­தான் மத்­திய பாஜக அர­சின் செயல்­பாடு­களை­யும் அதற்குப் பின்­ன­ணி­யில் இருந்து இயக்கி வரும் கோட்­பாடு­களை­யும் உயர்த்­திப் பிடிக்­கும் வகை­யில் அவர் கருத்­து­கள் இருப்­பது தெரி­ய­வ­ரு­கிறது," என்று வைகோ தெரி­வித்­துள்­ளார்.

உல­கப் பொது­மறை 'திருக்­கு­றளை' வேத சட்­ட­கத்­தி­னுள் அடைக்க முயற்சி செய்­வ­தை­யும் தமி­ழர்­கள் வேடிக்­கை பார்க்க மாட்­டார்­கள் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், ஆளு­நர் என்­ப­வர் அனைத்து மக்­க­ளுக்­கும் பொது­வா­ன­வர் என்­றும் எந்த தத்­து­வத்­தின் சாய­லும் ஆளு­நர் மீது படர்ந்து விட­லா­காது என்­றும் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக ஆளு­ந­ரின் வாழ்த்­துச் செய்தி அந்த எல்­லை­களை கட்­ட­றுத்து தாண்டி இருப்­ப­தா­க­வும் வைகோ சுட்­டிக்­காட்டி உள்­ளார்.