தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவமதித்ததாகப் புகார்

தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அவமதித்ததாகப் புகார்

2 mins read
4e10c636-071a-400f-badc-77f6eaf99718
சர்ச்சையில் சிக்கிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள். படம்: ஊடகம் -

சென்னை: தமிழ்த்­தாய் வாழ்த்­து ஒலிக்கும்­போது எழுந்து நிற்­பது சட்­ட­மல்ல என்­றும் அது அறம் என்­றும் கவி­ஞர் வைர­முத்து கூறி­யுள்­ளார்.

தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லுக்கு ரிசர்வ் வங்கி அதி­கா­ரி­கள் எழுந்து நிற்­கா­த­தற்கு அவர் டுவிட்­டர் பதி­வின் மூலம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளை­யில் நேற்று முன்­தி­னம் குடி­ய­ரசு தின விழா­ கொண்­டா­டப்­பட்­டது. அந்த நிகழ்ச்­சி­யின் முடி­வில் தமிழ்த்­தாய் வாழ்த்துப் பாடல் இசைக்­கப்­பட்­ட­போது, அதி­கா­ரி­கள் சிலர் எழுந்து நிற்­க­வில்லை.

அவர்­கள் இருக்­கை­யில் அமர்ந்­திருப்­ப­தைக் கண்ட செய்­தி­யா­ளர் ஒரு­வர், தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் ஒலிக்­கும்­போது எழுந்து நின்று மரி­யாதை செலுத்தவேண்­டும் என்­றார்.

அதற்கு அதி­கா­ரி­கள் தரப்­பில், அவ்­வாறு எழுந்து நிற்கவேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் இது­தொ­டர்­பாக நீதி­மன்­றமே உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் தமிழ்த்­தாய் வாழ்த்துப் பாடல் இசைக்­கப்­ப­டும்­போது அனை­வ­ரும் கட்­டா­யம் எழுந்து நிற்க வேண்­டும் என்று தமி­ழக அரசு அர­சாணை வெளி­யி­ட்டுள்­ளது. இது­கு­றித்து விளக்­கப்­பட்­ட­தும், இனி ஆணை பின்­பற்­றப்­படும் என அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

எனி­னும் அதி­கா­ரி­க­ளின் செய­லுக்­காக ரிசர்வ் வங்­கி­யின் மண்­டல இயக்­கு­நர் எஸ்.எம்.என்.சாமி வருத்­தம் தெரி­வித்­துள்­ளார்.

அதி­கா­ரி­க­ளின் இந்­தச் செயல்­பாட்டுக்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்ட கவி­ஞர் வைர­முத்து, அதி­கா­ரி­க­ளின் இத்­த­கைய போக்கை 'தமிழ்த்­தாய் மன்­னிப்­பாள்; சட்­டம்...?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்­க­றி­ஞர் ராஜேஷ் என்­ப­வர் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் மீது குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி சென்னை காவல் ஆணை­ய­ரி­டம் புகார் அளித்­துள்ளார்.

இந்நிலையில், அதி­கா­ரி­களின் செய­லுக்­குக் கண்­ட­னம் தெரி­வித்து சென்­னை­யில் உள்ள ரிசர்வ் வங்­கிக் கிளையை முற்றுகை­யிட்டு போராட்­டம் நடத்­தப்­படும் என்று தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சி அறி­வித்­தது. ரிசர்வ் வங்கி அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்டே தமிழ்த்­தாயை அவ­ம­திக்­கும் செய­லில் ஈடு­பட்­ட­தாக பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் சாடி­யுள்­ளார்.

"மத்­திய அரசு அதி­கா­ரி­க­ளாக இருந்­தா­லும் தமி­ழ­கத்­தில் மாநில விதி­களை மதிக்கவேண்­டும். தமிழ்த்­தாயை அவ­ம­தித்­த­வர்களை மன்­னிக்­கக்­கூ­டாது. இது­கு­றித்து புகார் வந்­தால்தான் நட­வ­டிக்கை எடுப்­போம் என அர­சும் காவல்­துறை­யும் காத்­தி­ருக்­கா­மல் சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என ராம­தாஸ் தெரிவித்துள்ளார்.

அம­முக பொதுச் செய­லா­ளர் தின­க­ரன், தமிழ்த்­தாய் வாழ்த்து இசைக்­கப்­பட்­ட­போது எழுந்து நிற்­கா­த­தோடு, அதனை நியா­யப்­படுத்­தி­யும் பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதி­கா­ரி­க­ளின் செயலை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.