திருச்சி: திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டாள், பிரேமி (எ) லெட்சுமி ஆகிய இரு பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த யானைகள் குளிப்பதற்காகக் கட்டப்பட்டு வந்த நீச்சல் தொட்டி நேற்று திறக்கப்பட்ட நிலை யில், அதில் படுத்துப் புரண்டு, தண்ணீரை தனது முதுகில் பீய்ச்சி அடித்து கும்மாளம் போட்டன. இந்த கண்கொள்ளாக் காட்சியை மக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.
அத்துடன், இவ்விரு யானை களும் நடைப்பயிற்சி சென்று வரவும் வசதிகள் செய்து தந்துள்ளனர்.
திருக்கோயிலுக்குச் சொந்தமான உடையவர் தோப்பில், சுமார் 40 அடி நீளம், 40 அடி அகலம், 10 அடி ஆழத்துக்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்கு நீச்சல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் திருக்கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தோப்பிற்கு வரும் இவ்விரு யானைகளும் அங்குள்ள வட்டப்பாதையில் நாளொன்றுக்கு 10 கி.மீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்றன.
இவ்விரு யானைகளும் கோயி லில் தினமும் நடக்கும் விஸ்வரூப பூசையிலும் திருவிழா பூசைகளிலும் பங்கேற்று மக்களுக்கு ஆசி வழங்கி வருகின்றன.
இந்த யானைகளுக்கு இயற்கை உணவு, சமைத்த உணவு மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்படுகிறது.
மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்கள் அவற்றின் உடல் நலனைப் பரிசோதிக்கின்றனர். வனத்துறை அலுவலர்களும் யானைகள் பராமரிப்புக்கு ஆலோசனைகள் கூறி வருகின்றனர்.

