தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி; மறியல்

தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி; மறியல்

1 mins read
38056f99-869d-4fe3-8f59-4931a9dc127d
-

திருப்­பூர்: மூன்று கூட்டு குடி­நீர் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்ட போதி­லும் திருப்­பூர் மாந­க­ரில் இன்­னும் குடி­நீர் தட்­டுப்­பாடு தொடர்ந்து நீடித்து வரு­கிறது.

எனவே 4வது குடி­நீர் ­திட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்­டும் எனவும் காலையில் தண்­ணீரைத் திறந்து விட நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும் ­எனவும் பொது­மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

கடந்த சில மாதங்­க­ளாக ஏழு நாட்­க­ளுக்கு ஒருமுறை விநி­யோ­கம் செய்­யப்­பட்டு வந்த குடிநீர், தற்­போது 10 நாட்­க­ளுக்கு ஒருமுறை விநி­யோ­கம் செய்­யப்­படு­கிறது. இத­னால், தண்­ணீர் தட்­டுப்­பாட்­டால் பொது­மக்­கள் தவித்து வரு­கின்­ற­னர். இதை­யடுத்து, திருப்­பூர் பல்­ல­டம் சாலை­யில் காலி­கு­டங்­க­ளு­டன் திரண்டு மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.