ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி பகுதியில் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், தங்களிடம் தங்கத்தை வழங்காமல் அலைக்கழித்து வருவதாக பயனாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த 27ஆம் தேதி அன்று நடைபெற இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் விழாவுக்கு 30 பயனாளிகளை வரும்படி சமூக நலத்துறை அதிகாரிகள் அழைத்திருந்தனர். ஆனால், விழா மண்டபம் பூட்டப்பட்டிருந்ததால் பயனாளிகள் ஆத்திரமடைந்தனர். "சமூக நலத்துறை அதிகாரிகள் முறையாகத் தெரிவிக்காமல் எங்களை அலையவிடுகிறார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என பயனாளிகள் கூறினர்.
தாலிக்குத் தங்கம்: அலைக்கழிப்பதாக புகார்
1 mins read
-

