'தேர்தல் மன்னன்' 227வது முறை மனுத் தாக்கல்

'தேர்தல் மன்னன்' 227வது முறை மனுத் தாக்கல்

1 mins read
112a978a-a344-4b34-9ca5-26c97335409b
தேர்தல் அதிகாரி ஜேம்சிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த மருத்துவர் கே.பத்மராஜன், அதற்கான ரூ.1,000 வைப்புத் தொகையையும் செலுத்தினார். இம்மனுவையும் சேர்த்து இதுவரை அவர் தாக்கல் செய்துள்ள மனுக்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது. இதனால்தான் இவர் 'தேர்தல் மன்னன்' என்ற செல்லப்பெயருடன் அழைக்கப்படுகிறார். படம்: தமிழக ஊடகம் -

சேலம்: 'தேர்­தல் மன்­னன்' என்று அழைக்­கப்­படும் சேலத்­தைச் சேர்ந்த கே.பத்­ம­ரா­ஜன் என்­ப­வர், நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக தனது ேவட்புமனு­வைத் தாக்­கல் செய்­தார்.

தமி­ழ­கத்­தில் வரும் 19ஆம் தேதி இத்தேர்­த­லுக்­கான வாக்குப் பதிவு நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் முதல் வேட்­பா­ளர்­கள் தங்­க­ளது வேட்பு மனுக்­க­ளைத் தாக்­கல் செய்து வரு­கின்­ற­னர்.

தேர்­தல் ஆணையத்தின் அறி­விப்பின்படி சனிக்­கி­ழ­மையான நேற்றும் பலரும் வேட்பு மனுக் களைத் தாக்கல் செய்தனர். வரும் திங்­கள் முதல் இப்பணி மேலும் தீவி­ர­ம­டை­யும் என்றும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, சேலம் மாவட்­டம், மேட்­டூ­ரைச் சேர்ந்த ஓமி­யோ­பதி மருத்­து­வர் பத்­ம­ரா­ஜன் தனது வேட்பு மனு­வைத் தாக்­கல் செய்­தார்.

சட்­ட­மன்­றத் தேர்­தல், நாடா­ளு­மன்­றத் தேர்­தல், உள்­ளாட்­சித் தேர்­தல் என எந்த ஒரு தேர்­த­லாக இருந்­தா­லும் தயங்­கா­மல் இவ­ரும் போட்­டி­யி­டு­வார்.

தமி­ழ­கத்­தில் மட்­டு­மின்றி வட­மா­நி­லங்­க­ளி­லும் பல தேர்­தல் களங்­க­ளைக் கண்­ட­வர். முன்­னாள் பிர­த­மர் இந்­திரா காந்தி, எம்­ஜி­ஆர், கரு­ணா­நிதி உள்­ளிட்­ட­வர்­களை­யும் எதிர்த்து அவ­ர்­க­ளது தொகு­தி­களில் போட்­டி­யிட்­டுள்­ளார். இப்­படி, அவர் இது­வரை தாக்­கல் செய்த வேட்புமனுக்­க­ளின் எண்­ணிக்கை 227 ஆகும்.

இதற்­கி­டையே, இந்த தேர்­த­லில் போட்­டி­யி­டு­ப­வர்­கள் கட்­டா­யம் இரு தவணை கொரோனா தடுப்­பூசி போட்டதற்­கான சான்­றி­தழை வேட்பு மனு­வு­டன் இணைக்க வேண்­டும் என்று தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.