குதிரை மீது அமர்ந்து 1,389 அம்புகளை எய்து உலக சாதனை

குதிரை மீது அமர்ந்து 1,389 அம்புகளை எய்து உலக சாதனை

1 mins read
79224ede-e9ce-4326-af8a-d33fb7950fb0
சென்னையில் முத்தமிழ்செல்வி என்ற பெண் வேலு நாச்சியார் போல் உடையணிந்து தொடர்ந்து 3 மணி நேரம் குதிரை மீது அமர்ந்து 1,389 அம்புகளைப் பறக்கவிட்டு யுனிக்கோ உலக சாதனை படைத்துள்ளார். படம்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: தாம்­ப­ரத்தை அடுத்த மண்­ணி­வாக்­கம் அர­சி­னர் மேல்­நிலைப்­பள்­ளி­யில் முத்­த­மிழ்­செல்வி என்ற பெண், வீர மங்கை வேலு நாச்சியார் போல் உடையணிந்து குதிரை மீது அமர்ந்து தொடர்ச்சி யாக 1,389 அம்புகளை எய்து யுனிக்கோ (Unico) உலக சாதனையைப் படைத்துள்ளார்.

­ இரண்டு பிள்­ளை­க­ளுக்குத் தாயான முத்­த­மிழ்­செல்வி ஏறக்குறைய 8 மீட்­டர் தொலை­வில் இருந்து மூன்று மணி நேரம் முடி­யும் தறு­வா­யில் 1,389 அம்புகளை எய்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த அம்பு எய்­தல் நிகழ்­வின் போது, அப்­ப­குதி மக்­களும் இளை­யர்களும் ஆர­வா­ரத்­து­டன் முத்­தமிழ்­செல்வியை உற்­சா­கப்ப­டுத்­தி­னர்.

போட்டியில் வெற்றி பெற்றதற் கான சான்­றி­தழை­யும் விரு­து­க­ளை­யும் யுனிக்கோ நிறு­வ­னத்தினர் வழங்கி, வாழ்த்­து­களைத் தெரி­வித்­த­னர்.

அதன்பிறகு செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த முத்­த­மிழ்­செல்வி, நான் புரிந்த இந்தச் சாத­னை­யை தமிழ்­நாட்டைச் சேர்ந்த வீர­மங்கை வேலு நாச்­சி­யாருக்குச் சமர்ப்­பிக்­கி­றேன். இது­போன்ற வீரப்­பெண்­மணி­கள் தமி­ழ­கத்­தில் இன்னும் உள்­ள­னர். பெண்­கள் சாதனை புரிய முன்­வரவேண்­டும் என்பதற் காகவே இந்த உலக சாதனையைப் படைத்துள்ளேன்," என்றார்.