போதை மகனை எரித்துக் கொன்ற பெற்றோர்

போதை மகனை எரித்துக் கொன்ற பெற்றோர்

1 mins read
37543d59-2a2a-47ff-8e20-3c0a8beb8af4
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் ஒரு முதியவரும் மூதாட்டியும் சைக்கிளின் பின்னால் ஒரு மூட்டையைக் கட்டி தள்ளிக்கொண்டு வந்தது பதிவாகி இருந்தது.படம்: தமிழக ஊடகம் -

மதுரை: தினந்­தோ­றும் மது அருந்தி­விட்டு, வீட்­டில் உள்ள பெற்­றோ­ருக்­குப் பெரும் தொல்லை கொடுத்து வந்த மகனை பெற்­றோரே கட்­டை­யால் அடித்­துக் கொலை செய்து, சாக்­கு­மூட்­டையில் கட்டி தீவைத்து எரித்­துள்­ள­னர்.

இந்­தக் குற்­றத்தை கண்­கா­ணிப்பு கேமரா காட்­டிக் கொடுத்­ததை அடுத்து பெற்­றோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் காலை­யில் மதுரை ஆரப்­பா­ளை­யம் வைகை ஆற்­றின் கரை­யோ­ரம் பாதி எரிந்த நிலை­யில் ஆணின் சட­லம் கிடப்­ப­தாக காவல்­நி­லை­யத்­துக்­குத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, கரி­மேடு காவல்­நி­லை­யக் காவல்­து­றை­யி­னர் சட­லத்தை மீட்டு உடல்­கூறு பரி­சோ­த­னைக்­காக மதுரை அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பிய பிறகு, விசா­ர­ணை­யைத் தொடங்­கி­னர்.

சம்­ப­வம் நடந்த பகு­தி­யில் இருந்த கண்­கா­ணிப்பு கேம­ராவை ஆய்வு செய்­த­தில், நள்­ளி­ர­வில் ஒரு முதி­ய­வ­ரும் மூதாட்­டி­யும் சைக்­கி­ளின் பின்­னால் ஒரு மூட்­டை­யைக் கட்டி, அதனை தள்­ளிக்­கொண்டு வைகை ஆற்­றுப் பக்­கம் சென்­றது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, மதுரை ஆரப்­பா­ளை­யம் பகு­தி­யைச் சேர்ந்த பழ வியா­பாரி முரு­கே­சன், 72, அவ­ரது மனைவி கிருஷ்­ண­வேணி, 65, ஆகி­யோ­ரி­டம் விசா­ரித்­த­னர்.

தங்­க­ளது ஒரே மகன் மணி மாற­னைக் கொன்­றதை அவர்­கள் ஒப்­புக்­கொண்­ட­னர். திரு­ம­ண­மாகி மூன்று பிள்­ளை­கள், மனை­வி­யைப் பிரிந்து பெற்றோரு­டன் வசித்து வந்த மணி­மா­றன், தின­மும் மது அருந்­தி­விட்டு குடும்பத்தில் ரகளை செய்துவந்தது தெரியவந்தது.