பேச்சில் இழுபறி: திமுகவிடம் அதிக இடங்களைக் கேட்கும் காங்கிரஸ்

பேச்சில் இழுபறி: திமுகவிடம் அதிக இடங்களைக் கேட்கும் காங்கிரஸ்

2 mins read
067b242c-67e4-4928-86bc-b9dac04fe168
-

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் இடப்­பங்­கீடு தொடர்­பில், திமுக, காங்­கி­ரஸ் கட்­சி­க­ளுக்கு இடை­யே­யான பேச்­சு­வார்த்­தை­யில் இழு­பறி நீடித்து வரு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

திருச்சி, மதுரை, சென்னை உள்­ளிட்ட மாவட்­டங்­களில் காங்­கி­ரஸ் அதிக எண்­ணிக்­கை­யி­லான வார்­டு­க­ளைக் கேட்­ப­தா­க­வும் அம்­மா­வட்­டங்­க­ளைச் சேர்ந்த திமுக தலை­வர்­கள் இக்­கோ­ரிக்­கையை ஏற்க மறுத்­து­விட்­ட­தா­க­வும் ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

இம்­முறை காங்­கி­ரஸ் சார்­பில் அமைக்­கப்­பட்­டுள்ள பேச்­சு­வார்த்­தைக் குழுக்­கள் அந்­தந்த மாவட்­டங்­களில் உள்ள திமுக மாவட்­டச் செய­லா­ள­ரி­டம் பேசி காங்­கி­ர­சுக்­கான வார்­டு­களை முடிவு செய்ய உள்­ளன. அந்த வகை­யில், திருச்சி மாந­க­ராட்­சி­யில் உள்ள 65 வார்­டு­களில் காங்­கி­ரஸ் 12 இடங்­க­ளைக் கேட்­ப­தா­க­வும் திமுக தரப்­பில் நான்கு வார்­டு­கள் மட்­டுமே ஒதுக்க இய­லும் எனக் கூறப்­பட்­ட­தா­க­வும் தெரி­கிறது.

திருச்­சி­யில் 15 வார்­டு­களை கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்கு ஒதுக்­கிய பின்­னர், மீத­முள்ள 50 வார்­டு­க­ளி­லும் கள­மி­றங்க வேண்­டும் என்­பதே திமு­க­வின் திட்­ட­மாக உள்­ளது.

எனவே, காங்­கி­ரஸ் கேட்­கும் வார்­டு­களை ஒதுக்க இய­லாது என்று திமுக முதன்­மைச் செய­ல­ரும் அமைச்­ச­ரு­மான கே.என்.நேரு திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்­ட­தாக அந்த ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே நிலை­மை­தான் மற்ற மாவட்­டங்­க­ளி­லும் நில­வு­வ­தா­கத் தெரி­கிறது. கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திமுக பெரிய வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளது. ஊரக உள்­ளாட்சி இடைத்­தேர்­த­லி­லும் எதிர்­பார்த்­த­தை­விட திமு­க­வுக்கு பெரிய வெற்றி கிடைத்­தது.

அந்த வெற்­றி­நடை நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லி­லும் நீடிக்­கும் என திமுக தலைமை நம்­பு­கிறது.

எனி­னும், இம்­முறை கூட்­ட­ணிக் கட்­சி­க­ளைக் கழற்­றி­வி­டா­மல், அதே சம­யம் அதிக எண்­ணிக்­கை­யி­லான வார்­டு­களை விட்­டுக்­கொ­டுக்­கா­மல் தேர்­த­லில் கள­மி­றங்க வேண்­டும் என்­பதே திமுக தலை­மை­யின் திட்­டம் எனக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, நகர்ப்­புற உள்­ளாட்சி தேர்­த­லில் போட்­டி­யிட இது­வரை எந்த கட்­சி­யி­ன­ரும் அதிக அள­வில் வேட்­பு­ம­னுக்­க­ளைத் தாக்­கல் செய்­ய­வில்லை.

இந்­நி­லை­யில், இன்று அமா­வாசை தினம் என்­ப­தால் பெரும்­பா­லா­னோர் வேட்­பு­ம­னுக்­க­ளைத் தாக்­கல் செய்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கூட்­ட­ணிக் கட்­சி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்தை முடி­வுக்கு வர­வில்லை என்ற போதி­லும், திமுக, அதி­முக ஆகிய இரு கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­கள் கடந்த முறை வெற்றி பெற்ற இடங்­களில் வேட்­பு­ம­னுக்­க­ளைத் தாக்­கல் செய்ய வாய்ப்­புள்­ள­தா­கத் தெரி­கிறது.