74வது தியாகிகள் தினத்தை யொட்டி, அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் 2,975 களிமண் குவளைகளால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் பிரம்மாண்ட சுவரோவி யத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 75 மட்பாண்டக் கலைஞர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 100 சதுர மீட்டர் பரப்பளவில், அலுமினியத் தாளில் இந்த குவளைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்டையை அமித் ஷா இயக்கினார்.
படம்: ஏஎஃப்பி

