பாஜக: அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் சிக்கல் இல்லை

பாஜக: அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் சிக்கல் இல்லை

2 mins read
51b99281-cc4a-429c-ab44-8eeb14442c2d
அண்ணாமலை. படம்: ஊடகம் -

சென்னை: இடப்­பங்­கீடு தொடர்­பாக பாஜக, அதி­முக இடையே நடை­பெ­றும் பேச்­சு­வார்த்­தை­யில் சிக்­கல் ஏதும் எழ­வில்லை என்­றும் இந்­தப் பேச்­சு­வார்த்தை நீடிக்­கும் என்­றும் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

வேட்­பு­மனுத் தாக்­கல் செய்ய பிப்ரவரி 4ஆம் தேதி வரை அவ­காசம் உள்­ள­தால், இடப்­பங்­கீடு தொடர்­பாக இரு தரப்­புக்­கும் இடையே அடுத்­த­கட்ட பேச்­சு­வார்த்தை நடக்­கும் என்று சென்னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்தல் இடப்பங்­கீடு தொடர்­பாக கிட்டத்தட்ட அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளுமே பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­டுள்­ளன. அந்த வகை­யில் நேற்று முன்­தி­னம் அதி­முக, பாஜக இடையே பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது.

சுமார் மூன்று மணி நேரம் இரு­தரப்­பும் பேசி­ய­தா­க­வும் அப்­போது பாஜக அதி­க­மான வார்­டு­களை ஒதுக்­கக் கோரி­ய­தால் எந்த உடன்­பா­டும் எட்­டப்­ப­ட­வில்லை என்றும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இந்­நி­லை­யில், உள்­ளாட்­சித் தேர்­த­லில் இடப்­பங்­கீடு செய்து கொள்­வ­தும் போட்­டி­யி­டு­வ­தும் சிக்­க­லான வேலை என்று அண்­ணா­மலை கூறி­னார்.

"கிட்­டத்­தட்ட 12,838 வார்­டு­களில் உறுப்­பி­னர்­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெ­று­கிறது. எனவே விரி­வாக ஆலோ­சனை நடத்­தித்தான் இடங்­களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதி­முக தலை­மை­யிலான கூட்­டணி என்­பது முக்­கி­ய­மான எதிர்க்­கட்சி அணி. தேர்­தல் களத்­தில் பல­மான கூட்­ட­ணி­யாக நின்று ஆளும் திமுக மீதான புகார்­களை மக்­க­ளி­டம் எடுத்­துச் சொல்ல வேண்­டும்," என்­றார் அண்ணாமலை.

இந்­நி­லை­யில் அதி­மு­க­வு­ட­னான பேச்­சு­வார்த்தை நல்­ல­ப­டி­யாக நடை­பெற்று வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அனைத்­தும் சுமு­க­மாக பேசி முடிக்­கப்­பட்ட பின்­னர் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கும் என்­றார்.

பாஜக அதி­க­மான வார்­டு­களை ஒதுக்­கக் கோரி­யதை ஒப்­புக்­கொண்­டுள்ள அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார், அதி­மு­க­ நலன் பாதிக்­கப்­ப­டாத வகை­யில் இட­ப்பங்­கீடு தொடர்­பாக முடி­வெ­டுக்­கப்­படும் என்று தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே இரு கட்­சி­க­ளுக்­கும் இடையே சுமுக உடன்­பாடு ஏற்­ப­டா­விட்­டால் பாஜக தனித்­துக் களம் காண வாய்ப்­புள்­ளது என்­றும் உட­ன­டி­யாக வேட்­பா­ளர் பட்­டி­யலை வெளி­யிட அக்­கட்சி தயார் நிலை­யில் உள்­ளது என்­றும் தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.