தி.மலை: குடியரசு தின விழாவுக்கு தாமதமாக வந்ததைக் கண்டித்ததலைமை ஆசிரியருக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கட்டிப்புரண்டு சண்டை போடும் அளவுக்கு முற்றியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 26ஆம் தேதி தலைமை ஆசிரியர் அண்ணாமலை (58 வயது) தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மாற்றுத்திறனாளியான செழியன் (50 வயது) உள்ளிட்ட ஐந்து ஆசிரியர்கள் தாமதமாக வந்ததை கண்டித்துள்ளார் அண்ணாமலை. இதையடுத்து, மறுநாள் அவருக்கும் செழியனுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அப்போது இருவரும் சட்டையைப் பிடித்து இழுத்து, தரையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர்.இதை காணொளியாகப் பதிவு செய்த ஒருவர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து, அது பரவலாகப் பகிரப்பட்டது.
இதையடுத்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

