தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீட் விவகாரம்: திமுக, அதிமுக போட்டாபோட்டி குற்றச்சாட்டு

3 mins read
0ea4ea99-9c76-4f0c-9557-92bc27235cc4
-

யார் காரணம் என்பதில் இரு கட்சிகளும் காரசார வாக்குவாதம்

சென்னை: தமிழ்­நாட்­டில் நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் நெருங்­கும் வேளை­யில், அந்த மாநி­லத்­தின் அர­சி­யல் கட்­சி­கள் நீட் பிரச்­சினையைப் பெரிய அள­வில் கையில் எடுக்­கின்­றன.

இந்­தி­யா­வில் மருத்­து­வம் படிக்க நீட் தேர்வு அவ­சி­யம் என்று மத்திய அர­சாங்­கம் 2014ல் அறி­வித்­தது. அந்­தத் தேர்­வில் இருந்து தமிழ்­நாட்­டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில கட்­சி­கள் போராடி வரு­கின்­றன.

இந்த நிலை­யில், இப்­போ­தைய மாநில அர­சாங்­கம் நிறை­வேற்­றிய நீட் தேர்­வுக்கு எதி­ரான ஒரு தீர்­மா­னத்தை மாநில ஆளு­நர் ரவி, தமி­ழக சட்­ட­மன்ற நாய­க­ருக்கே திருப்பி அனுப்­பி­விட்­டார்.

அதை­ய­டுத்து, இன்று தமி­ழக சட்­ட­மன்­றத்­தின் சிறப்பு கூட்­டம் நடக்­கிறது. அதில் நீட் தேர்­வுக்கு எதி­ரான தீர்­மா­னம் மீண்­டும் உறு­தி­யாக நிறை­வேற்­றப்­பட்டு அதி­பரின் அங்­கீ­கா­ரம் பெறு­வ­தற்­காக மறு­படி­யும் அது ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­படும் என்று தமி­ழக அரசு அறி­வித்து உள்­ளது.

இச்சூழ­லில், உள்­ளாட்­சித் தேர்­தல் நெருங்­கு­வ­தால் இந்­தப் பிரச்சினையை அர­சி­யல் கட்­சி­கள் கையில் எடுக்­கின்­றன.

நீட் தேர்வை 2014ல் பாஜக அர­சாங்­கம் தமிழ்­நாட்­டில் நடை­மு­றைப்­படுத்­தி­யது என்­றும் ஆனால் அப்­போ­தைய அதி­முக முதல்­வர் ஜெய­லலிதா அதை எதிர்த்­த­தா­க­வும் அதை­ய­டுத்து 2016ல் நீட் தேர்­வில் இருந்து தமிழ்­நாட்­டுக்கு ஓராண்டு விலக்கு அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

இருந்தாலும் ஜெய­ல­லி­தா­வுக்குப் பிறகு பொறுப்புக்கு வந்த அதி­முக தலை­வர்­கள் பாஜ­க­வுக்கு அடி­மை­களாக மாறி, நீட் தேர்வை எதிர்க்க தவ­றி­விட்­ட­தா­க­வும் அதன் கார­ண­மாக மாண­வர்­கள் பெரும் பாதிப்­புக்கு உள்­ளாகி இருப்­ப­தா­க­வும் மெய்­நி­கர் ரீதி­யில் உள்­ளாட்­சித் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்ட முதல்­வர் ஸ்டா­லின் பகி­ரங்­க­மாக குற்­றம் சுமத்­தி­னார்.

இன்று கூடும் சட்­ட­மன்­றத்­தில் நீட் தேர்­வுக்கு எதி­ரான தீர்­மா­னம் முன்­பை­விட வலு­வாக, உறு­தி­யாக நிறை­வேற்­றப்­பட்டு அது மறு­ப­டி­யும் ஆளு­ந­ருக்கு அனுப்பி வைக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், உள்­ளாட்­சித் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்ட அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ. பன்­னீர்­செல்­வம், தமிழ்­நாட்­டில் நீட் நடப்­புக்கு வந்­த­தற்குத் திமு­க­தான் காரணம் என்று அறிக்கை ஒன்­றில் குறைகூறி­னார்.

திமுக பத­வி­யில் இருந்­த­போது தமிழ்­நாட்­டுக்கு நீட் வர­வில்லை என்று அந்­தக் கட்சி கூறு­வதை பன்­னீர்­செல்­வம் மறுத்­தார்.

நீட் பற்­றிய அறி­விப்பு 2010 டிசம்­ப­ரில் அர­சி­த­ழில் வெளி­யி­டப்­பட்­டது. அப்­போது மத்­தி­யில் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி செய்­தது.

மத்­தி­யில் சுகா­தார துணை அமைச்­ச­ராக இருந்­த­வர் திமு­க­வின் காந்தி செல்­வன். நீட் தேர்வை அவர் ஆத­ரித்­தார். 2011ல் தமிழ்­நாட்­டில் திமுக ஆட்­சியை இழந்­தது. மத்­திய அர­சாங்­கம் 2012ல் நீட் தேர்வை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சி­களை எடுத்­தது.

ஆனால் பல மாநி­லங்­களும் அதை எதிர்த்­தன. அப்­போது தமிழக முதல்­வ­ராக இருந்த அதிமுக தலைவி ஜெய­ல­லி­தா­வும் அதை எதிர்த்­தார். அதனால் மத்திய அரசு நீட் தேர்வை ஒத்­தி­வைத்­தது.

பிறகு உச்ச நீதி­மன்­றம் 115 தனி­யார் மருத்துவக் கல்­லூ­ரி­கள் தொடுத்த வழக்கு ஒன்­றின் அடிப்­படை­யில் நீட் தேர்வை ரத்து செய்­தது. ஆனால் 2016ல் உச்ச நீதி­மன்­றம் தன் தீர்ப்பை மாற்­றிக்­கொண்­டது. இந்த விவ­ரங்­களை எல்­லாம் ஸ்டா­லின் மறைத்­து­விட்­டார் என்றார் பன்­னீர் செல்­வம்.

அதி­மு­க­வின் இதர தலை­வர்­களும் மாநில பாஜ­க­வும் நீட் தமி­ழ­கத்­தில் நடை­மு­றைக்கு வந்­த­தற்கு திமு­க­தான் கார­ணமென கூறினர்.