புதுச்சேரி: புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற ஆடவர் ஒருவர், ஏற்கெனவே பணம் எடுக்க வந்த ஒருவர் இயந்திரத்திலேயே விட்டுச் சென்றிருந்த ரூ.10,000 பணத்தை எடுத்து காவல்துைறயில் ஒப்படைத்தார்.
அவரது நேர்மையான குணத்தை காவல்துறை உயர் அதிகாரி முருகானந்தம் பாராட்டினார்.
புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி சாந்தி. இவர், பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் 6ஆம் தேதி, பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக மருத்துவமனை வாயிலில் உள்ள ஏடிஎம்மில் ரூ.10,000 பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், இயந்திரத்தில் இருந்து பணம் வராததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து வங்கியில் புகார் கூறினார்.
இதனிடையே, புவனகிரி சிலம்பி மங்களத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற ஆடவர், அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, இயந்திரத்தில் ரூ.10,000 பணம் இருந்தது. அதை எடுத்து கிருமாம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக கிருமாம்பாக் கம் உயர் காவல் அதிகாரி முரு கானந்தம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்து, வங்கி ஊழியர் ராமராஜ் முன்னிலையில் ரூ.10,000 பணத்தை சாந்தியிடம் ஒப்படைத்தார்.

