ராமஜெயம் கொலை வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரமடையும் விசாரணை

ராமஜெயம் கொலை வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரமடையும் விசாரணை

2 mins read
d37f3f18-f3aa-4a3d-b915-661b2fa6c127
-

சென்னை: அமைச்­சர் கே.என்.நேரு­வின் சகோ­த­ரர் ராம­ஜெ­யம் கொலை வழக்கை விசா­ரிக்க சிறப்­புப் புல­னாய்­வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதி­மன்­றம் நேற்று உத்­தரவிட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி நடை­ப்ப­யிற்சி சென்ற அமைச்­சர் கே.என்.நேரு­வின் சகோ­த­ரர் ராம­ஜெ­யம் கொலை செய்­யப்­பட்­டார்.

தமி­ழ­கத்­தில் பெரும் பர­ப­ரப்பை யும் அதிர்ச்­சி­யை­யும் ஏற்­ப­டுத்­திய இச்சம்­ப­வம் குறித்து முத­லில் சிபி­சி­ஐடி விசா­ரணை நடத்­திய நிலை­யில், "விசா­ர­ணை­யில் திருப்தி இல்லை," என்று ராம ஜெயத்­தின் மனைவி லதா தாக்­கல் ெசய்த வழக்கை உயர் நீதி­மன்ற மதுரை கிளை விசா­ரித்­தது.

இதை­ய­டுத்து, இவ்­வ­ழக்கை சிபிஐ வசம் ஒப்­ப­டைத்து மூன்று மாதத்­தில் அறிக்கை தாக்­கல் செய்­யும்­படி உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், "சிபிஐ விசா ரணை­யி­லும் எந்த ஒரு முன் னேற்­ற­மும் ஏற்­பட்­ட­தாக தெரிய வில்லை," எனக் கூறி, வழக்கு விசா­ர­ணையை மாநி­லக் காவல் துறையே விசா­ரிக்க வேண்­டும் என்ற கோரிக்­கை­யு­டன் ராம ஜெயத்­தின் மற்­றொரு சகோ­த­ரர் கே.என்.ரவிச்­சந்­தி­ரன் ெசன்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடர்ந்­தார்.

இவ்வழக்கை விசா­ரித்த நீதி­பதி பார­தி­தா­சன், "கடந்த 10 ஆண்­டு­க­ளாக சிபி­சி­ஐடி, சிபிஐ என இரு அமைப்­பு­களும் அடுத்­த­டுத்து விசா­ரணை நடத்­தி­யும் கொலைக்­கான நோக்­க­மும் கொலை­யா­ளி­களும் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டி­ய­தோடு, ராம­ஜெ­யம் கொலை வழக்கை விசா­ரிக்க சிறப்­புப் புல­னாய்வு குழு அமைப்­ப­தா­க உத்தரவிட்டார்.

இந்­தக் குழு­வின் தலை­வ­ராக தூத்­துக்­குடி எஸ்.பி.ஜெயக்­கு­மார், உறுப்­பி­னர்­க­ளாக அரி­ய­லூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ ரவி ஆகி­யோர் நிய­மிக்­கப்­படு கிறார்­கள். மேலும், விசா­ர­ணையை சிறப்பு புல­னாய்­வுக் குழு­வின் டிஜிபி ஷகீல் அக்­தர் கண்­காணிக்க வேண்­டும்.

வழக்­கின் விசா­ர­ணையை பிப்­ர­வரி 21க்குப் பின் தொடங்­கி­னால் நல்­லது எனக் கூறிய நீதி­ப­தி­, 15 நாள்­க­ளுக்கு ஒரு­முறை நீதி­மன்­றத்­தில் அறிக்கை தாக்­கல் செய்­ய­வும் உத்­த­ர­விட்டார்.