தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணல் கடத்தல் விவகாரம்: ஆறு பாதிரியார்களின் பிணை மறுப்பு

1 mins read
6766f4eb-eaef-422b-a4fe-5e1a643c4911
-

திரு­நெல்­வேலி: திரு­நெல்­வேலி மாவட்­டம், அம்­பா­ச­முத்­தி­ரம் பகு­தி­யில் நடை­பெற்ற ஆற்று மணல் கடத்­தல் விவகாரம் தொடர்­பில் கேர­ளா­வைச் சேர்ந்த கத்­தோ­லிக்க பிஷப் உட்­பட ஆறு பாதி­ரி­யார்­களைச் சிபி­சி­ஐடி காவல்­துறையினர் கடந்த 7ஆம் ேததி கைது செய்த நிலையில், நேற்று அவர்களது பிணை மனு தள்ளுபடி ஆனது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நெல்லை குற்றவியல் நீதிமன்றம், அவர்களது பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அவர்­களில் ஒரு­வர் கொரோ­னா­வா­லும் மற்­றொ­ரு­வர் சிறு­நீ­ர­கக் கோளா­றா­லும் பாதிக்­கப்­பட்டு, மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பத்­த­னம்­திட்டா பிஷப் சாமு­வேல் மார் இரே­னி­யோஸ், பாதி­ரி­யார்­கள் ஜார்ஜ் சாமு­வேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சாம­கலா, ஜோஸ் கள­வி­யல் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்டு திரு­நெல்­வே­லி­யில் நீதி­மன்­றக் காவ­லில் வைக்­கப்பட் டுள்­ள­னர்.

கல்­லி­டைக்­கு­றிச்சி அரு­கே­யுள்ள பொட்­டல் கிரா­மத்­தில், கேரள மாநி­லம், பத்­த­னம்­திட்டா கத்­தோ­லிக்க சபைக்குச் சொந்­த­மான 300 ஏக்­கர் விவ­சாய நிலம் உள்­ளது.

இந்த நிலத்தில், எம் சாண்ட் எனும் செயற்கை மணல் தயாரிப்பதாகக் கூறி, வண்­டல் ஓடைகளில் இருந்து ஏறத்தாழ 27,000 கியூபிக் ஆற்று மணல் கடத்தப்பட்டதாக வழக்கு தொடரப் பட்டது.