மாணவன் மரணம்: பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவன் மரணம்: பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பணியிடை நீக்கம்

1 mins read
5e675235-6c13-490e-8b37-b62563e73454
-

புதுக்­கோட்டை: புதுக்­கோட்டை மாவட்­டம், பாப்­பன்விடுதி கிரா­மத்­தில் உள்ள அரசுப் பள்­ளி­யில் நான்­காம் வகுப்­பில் படித்து வந்த மாண­வன் நிதிஷ்­கு­மார், தனக்கு உடல்­நலமில்லை என்று ஆசி­ரி­ய­ரி­டம் தெரி­வித்­துள்­ளான்.

ஆசி­ரி­யர்­கள் நிதிஷ்­கு­மா­ரின் பெற்­றோ­ரைத் தொடர்­பு­கொண்ட போது, தாங்கள் வெளி­யூ­ரில் இருப்­ப­தா­க­வும் தனது மகனை வீட்­டில் விட்­டு­விட்­டால் உற­வி­னர்­கள் பார்த்­துக்ெ­காள்­வார்­கள் என்­றும் கூறி­யுள்­ள­னர்.

இதை­ய­டுத்து, நிதிஷ்­கு­மா­ரின் உடல்­நிலை மோசமடைய, உறவினர்­கள் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லும் வழி­யி­லேயே சிறு­வன் உயி­ரி­ழந்­தான்.

இந்­நி­லை­யில், உற­வி­னர்­க­ளின் போராட்­டத்­தைத் தொடர்ந்து பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் மகேஸ்­வரி­யும் வகுப்பு ஆசி­ரி­யர் ஆரோக்­கிய அமல்­ரா­ஜும் பணி­இடைநீக்­கம் செய்­யப்­பட்­ட­னர்.

உயி­ரி­ழந்த மாண­வ­னின் குடும்­பத்­திற்கு ரூ.3 லட்­சம் நிவா­ரண நிதியை வழங்க முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­தரவிட்­டுள்­ளார். சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் உறுதி அளித்துள்ளார்.