சென்னை: சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது ேநற்று அதிகாலை மூன்று மணி அளவில் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது.
கட்டடத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட இரு ஆடவர்களில் ரவுடி கர்த்தா வினோத் என்பவர் கைது செய்யப் பட்டார். பாஜக அலுவலகம், அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து நந்தனத்தைச் சேர்ந்த வினோத் கைதானார்.
காவல் துறை அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில், வினோத் மீது பல குற்றவழக்குகள் உள்ளதாகவும் மருத்துவத் தேர் வுக்கான நுழைவுத் தேர்வாக விளங்கும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவதைக் கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரியவந்துள்ளது.
பாஜக அலுவலகத்துக்கு வந்திருந்த கட்சித் தொண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய நிலையில், இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளன.
"கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளது. தலைநகர் சென்னையில் நடந்துள்ள இந்த பெட்ரோல் குண்டு கலாசாரம், சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாகி உள்ளதை கோடிகாட்டுகிறது," எனப் பதிவிட்டுள்ளார்.

