காரைக்குடி: காரைக்குடி நகராட்சி யில் சுயேச்சையாகப் போட்டியிடும் தனது கணவரை எதிர்த்து நான்காவது முறையாக அவரது மனைவியும் போட்டியிடுகிறார்.
காரைக்குடி நகராட்சியில் மெய்யர் என்பவர் தொடர்ந்து மூன்று முறையாக சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது அவர் மீண்டும் போட்டி யிடும் நிலையில், தனது வெற்றிக்கு ஒற்றைப்படை எண்களை முக்கிய காரணமாகவும் அவர் கருதி வருகிறார்.
ஒருவேளை, வேட்பாளர்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணிக்கையில் வந்தால் ஒருவரை மீட்டுக்கொள்ளச் செய் வதற்கு (வாபஸ்) தோதாக, தனது மனைவி சாந்தியை கடந்த மூன்று முறையாக அவர் போட்டியிட வைத்துள்ளார்.

