1,100 பதற்றமான வாக்குச் சாவடிகளில் நேரடி கானொளிப் பதிவு; 19ஆம் தேதி விடுமுறை களைகட்டும் தேர்தல் பிரசாரம்; போட்டிபோட்டு வாக்கு சேகரிப்பு

1,100 பதற்றமான வாக்குச் சாவடிகளில் நேரடி கானொளிப் பதிவு; 19ஆம் தேதி விடுமுறை களைகட்டும் தேர்தல் பிரசாரம்; போட்டிபோட்டு வாக்கு சேகரிப்பு

2 mins read
cabafb82-3b13-49e7-9e84-7cebd4ba045a
கோவை மாவட்டம், கண்ணப்ப நகர்ப் பகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார் மகேஸ்வரன். இவர், ஆர்மோனியப் பெட்டியை இசைத்து, பாடல்களைப் பாடியபடி வீடுதோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். படம்: தமிழகஊடகம் -

தூத்­துக்­குடி: தமி­ழ­கத்­தில் நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் வரும் 19ஆம் தேதி (சனிக்­கி­ழமை) ஒரே கட்­ட­மாக நடக்­கிறது. தேர்­த­லுக்கு இன்­னும் ஒரு வார காலமே எஞ்­சி­யுள்ள நிலை­யில், வித­வி­த­மான பிர­சா­ர உத்திகளால் தேர்­தல் களம் களை­கட்டி வரு­கிறது.

ஒரு­பு­றத்­தில் தேநீர் கடை­கள், இறைச்­சிக் கடை­களில் வியா­பா­ரம் செய்­தும் ஆர்­மோ­னி­யம் வாசித்­தும் பாட்டு பாடி­யும் வாக்­கா­ளர்­களி­டம் வேட்­பா­ளர்­கள் வாக்கு சேக­ரித்து வரு­கின்­ற­னர்.

மற்­றொ­ரு­பு­றம் பல்­வேறு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­களும் தங்­க­ளது வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக அனல் பறக்­கும் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், செவி­லி­மேடு பகு­தி­யில் போட்­டி­யி­டும் அதி­முக, கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­துப் பேசிய முன்­னாள் முதல்­வ­ர் எடப்­பாடி பழ­னி­சாமி, "திமுக ஆட்­சிக்கு வந்­த­தில் இருந்து எந்த திட்­டத்­தை­யும் செயல்­ப­டுத்­த­வில்லை. அதி­முக திட்­டங்­க­ளை­யும் முடக்குகிறது," என்று விமர்­சித்­துள்­ளார்.

"காவல்­து­றை­யி­னர் நடு­நி­லை­யோடு செயல்­ப­ட­வேண்­டும். ஜன­நா­யக முறைப்­படி தேர்­தல் நடை­பெற வேண்­டும். நான் இப்­போ­துள்ள பொம்மை முதல்­வ­ரைப்­போல் இருக்க மாட்­டேன். எக்­கா­ரி­யத்தை யும் துணிச்­ச­லோடு செய்­வேன்," என­வும் அவர் ேபசி­யுள்­ளார்.

"கொங்கு மண்­ட­லம் இன்று வரை அதி­மு­க­வின் எஃகு கோட்­டை­யாக உள்­ளது," என அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஒ.பன்­னீர் செல்­வம் கோவை பிர­சா­ரத்­தில் பேசியபோது கூறி­னார்.

இதற்­கி­டையே, குடும்ப அர­சி­யல் ஜன­நா­ய­கத்­திற்கு ஆபத்­தா­னது என பிர­த­மர் மோடி விமர்­சனம் செய்­தி­ருந்த நிலை­யில், "தமி­ழர்­க­ளின் நாட்­டுப்­பற்­றுக்கு பிர­த­ம­ரின் நற்­சான்று தேவை­யில்லை," என முதல்­வர் மு.க.ஸ்டாலின் தெரி­வித்­துள்­ளார்.

'உள்­ளாட்­சி­யி­லும் தொட­ரட்­டும் நம்ம ஆட்சி' என்ற முழக்­கத்­தோடு ஐந்­தா­வது நாளாக ஈரோடு மாவட்ட­ வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து காணொளி வழி நேற்று மாலை அவர் பிர­சா­ரம் செய்­தார்.

வாக்களிப்பு நேரடி கண்காணிப்பு

சென்­னை­யில் அமைக்­கப்­பட்டு உள்ள 5,794 வாக்­குச்­சா­வ­டி­களில் 1,100 வாக்­குச்­சா­வ­டி­கள் பதற்ற மானவை என கண்­ட­றி­யப்­பட்டு, வாக்­க­ளிப்பை நேர­டி­யா­கக் கண்­கா­ணிக்­கும் வகை­யில் காணொளி பொருத்­தப்­பட்டு வரு­வ­தாக மாந­க­ராட்­சித் தேர்­தல் அதி­கா­ரி­ ‌ககன்­தீப் சிங் பேடி கூறி­யுள்­ளார்.

வாக்­குப் பதிவு இயந்­தி­ரங்­களில் சின்­னம் பொருத்­தும் பணி நடந்து வரும் நிலை­யில், வாக்­க­ளிப்பை முன்­னிட்டு வரும் 19ஆம் தேதி பொது விடு­முறை அறி­வித்து மாநில அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.