சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஷ்வா் நாத் பண்டாரி (படம்) வரும் 22ஆம் பதவியேற்க உள்ளார்.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்பரில் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு, முனீஷ்வா் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்க உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

