மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்ற எழுவர் கைது

மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்ற எழுவர் கைது

1 mins read
7c6d913c-5d8a-44ac-9f86-82712d65feac
-

திருச்சி: திருச்சி மாவட்­டம் அரிய­மங்­க­லம் பகு­தி­யில் பள்ளி, கல்லூரி மாண­வர்­க­ளுக்கு போதை மாத்­திரை, போதை ஊசி விநி­யோ­கித்து வந்த ஒரு பெரிய கும்­பலைக் கைது செய்ய தனிப்­படை அமைக்­கப்­பட்­டது.

மத்­திய பேருந்து நிலை­யம், திரு­வ­ரங்­கம், பாலக்­கரை, அரி­ய­மங்­க­லம் உள்­ளிட்ட பகு­தி­களில் போதை மாத்­திரை, போதை ஊசி­களைப் பதுக்கிவைத்து சட்­ட­விரோ­த­மாக விற்­பனை செய்து வரு­வ­தாக காவல்­துறைக்கு ரக­சியத் தக­வல் கிடைத்­துள்­ளது.

இதை­ய­டுத்து, போதைப் பொருள் விநி­யோ­கிக்­கப்­படும் இடங்­க­ளுக்கு அதை வாங்­கு­பவர்­கள் போல் சென்ற தனிப்­படை காவல்­துறை அதி­காரிகள், திரு­வ­ரங்­கத்­தைச் சேர்ந்த அர­விந்த், காட்­டூ­ரைச் சேர்ந்த ெஷப்­ரின், கல்­லுக்­குழி, முடுக்­குப்­பட்­டி­யைச் சேர்ந்த நாக­ராஜ், கார்த்­திக் ராஜா, ஜெய­ரா­மன், கோகுல், பிர­வீன்­ ராஜ் ஆகிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்­தக் கும்­ப­லி­டம் இருந்து 1,450 போதை மாத்­தி­ரை­களையும் 80 போதை மருந்து போத்­தல்­களையும் அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.