கூலித் தொழிலாளர்களை பணம் தந்து ஈர்க்கும் வேட்பாளர்கள்

கூலித் தொழிலாளர்களை பணம் தந்து ஈர்க்கும் வேட்பாளர்கள்

1 mins read
3b46b671-9585-4bfa-ae01-914148088161
-

ராம­நா­த­பு­ரம்: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்­காக வேட்­பா­ளர்­கள் வீடு­வீ­டா­கச் சென்று வாக்கு சேக­ரித்து வரு­கின்­ற­னர்.

இந்த வேட்­பா­ளர்­க­ளு­டன் சேர்ந்து வாக்கு கேட்­கச் செல்­லும் ஆண்­கள், பெண்­க­ளுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை பண­மும் சாப்­பா­டும் வழங்­கு­வ­தால் வழக்­க­மான கட்­டு­மா­னம், விவ­சா­யப் பணிகளைத் தவிர்த்து கூலித் தொழி­லா­ளர்­கள் பலர் தேர்­தல் பிர­சா­ரத்­திற்குச் செல்­வது அதி­க­ரித்­துள்­ளது.

இத­னால், வழக்­க­மான கட்­டு­மா­னப் பணி­களும் விவ­சா­யப் பணி­களும் பாதிக்­கப்­பட்டு வருவ தாக­வும் போது­மான அள­வில் அன்­றா­டப் பணிக்கு ஆள்கள் கிடைப்­பது அரி­தாகி உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, விவ­சா­யப் பணி­களைத் தொய்­வின்றி மேற்­கொள்ள நூறு நாள் வேலை­யாள்களை ஊராட்சி நிர்வாகத்தினர் அனுப்­பி­வைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவ­சா­யி­கள் வலி­யுறுத்தி ­உள்­ள­னர்.