உடுமலை: கொரோனா விவகாரத்தால் வருவாய் இன்றித் தவித்து வந்த உடுமலைப் பேட்டையில் உள்ள தாரை, தப்பட்டை இசைக்குழுக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கைகொடுத்துள்ளது.
உடுமலை நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இந்த இசைக்குழுக்களை (படம்) பிரசாரத்தின்போது உடன் அழைத்துச் செல்கிறார்கள்.
ஊரடங்கு காலத்தில், நிகழ்ச்சிகள் இல்லாமல் முடங்கியிருந்த தங்களுக்கு, தேர்தல் காலத்து வருவாய் சற்று ஆறுதல் அளித்து வருவதாகவும் ஒவ்வொரு வேட்பாளரும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை தருவதாகவும் இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி, 76வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கார்த்திக். நேற்று முன்தினம் இவர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து அவர் தலைக்கவசத்துடன் (படம்) பிரசாரம் செய்கிறார்.

