மழை: திருவாரூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

மழை: திருவாரூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

1 mins read
f0848b70-234c-4e6d-b901-432e8d435b2f
-

திரு­வா­ரூர்: தென்­மா­வட்­டங்­களில் பெய்து வரும் கன­மழை கார­ண­மாக பள்­ளி­க­ளுக்கு நேற்று விடு­முறை அறி­விக்­கப்­பட்­டது. இத­னால் அங்கு தேர்­தல் பிர­சா­ரம் பாதிக்­கப்­பட்­டது.

மன்­னர் வளை­குடா பகுதியில் புதிய வளி­மண்­டல சுழற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் கார­ண­மாக, தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், மயி­லா­டு­துறை, கட­லூர், புதுக்­கோட்டை, காரைக்­கால் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகு­தி­களில் பரவலாக பலத்த மழை பெய்து வரு­கிறது.

குறிப்­பாக கட­லோர, டெல்டா மாவட்­டங்­களில் அதிக மழை பெய்­துள்­ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, திரு­வா­ரூர், நாகை, மயி­லா­டு­துறை, ராம­நா­த­பு­ரம் ஆகிய நான்கு மாவட்­டங்­களில் பள்­ளி­களுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்ட போதி­லும், தேர்வு எழுத வேண்­டிய மாண­வர்­கள் மட்­டும் பள்ளிக்கு வர வேண்­டும் என மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் கன­மழை கார­ண­மாக வேளாண் அறு­வ­டைப் பணி­களும் தேர்­தல் பிர­சா­ர­மும் பாதிக்­கப்­பட்­டன. காலை முதல் மாலை வரை மழை நீடித்­த­தால் ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் பல்­வேறு பகு­தி­களில் தேர்­தல் பிர­சார நட­வடிக்­கை­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. சில வேட்பாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் மேற்கொண்டனர்.

பல இடங்­களில் சம்பா அறு­வடை பணி­களும் செங்­கல் சூளை பணி­களும் தடை­பட்­டன. மேலும், வெள்ள நீரில் பயிர்­கள் மூழ்கி இருப்­ப­தால் பெரும் நஷ்­டம் ஏற்­படும் என விவ­சா­யி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர். விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இன்று முதல் மழை மெல்ல குறையும் என்று கூறப்படுகிறது.