மார்ச் 2 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்: அரசு அறிவிப்பு

மார்ச் 2 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்: அரசு அறிவிப்பு

2 mins read
bf86b1a4-3ab6-45e8-903d-30a123b668cc
-

சென்னை: தமி­ழ­கத்­தில் எதிர்­வ­ரும் மார்ச் 2ஆம் தேதி வரை தளர்­வு­களு­டன் கூடிய ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப்­படும் என அரசு அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், கொரோனா நோய்த் தடுப்பு நட­வ­டிக்­கை­கள், கட்­டுப்­பா­டு­கள் குறித்து ஆய்வு செய்ய முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நடை­பெற்ற ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் இம்­மு­டிவு எடுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற உள்­ளதை அடுத்து, அர­சி­யல் கூட்­டங்­கள் நடத்த கட்­டுப்­பா­டு­க­ளு­டன் அனு­மதி அளிக்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு நிலவி வந்த நிலை­யில், அரசு புதிய அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் தமி­ழ­கத்­தில் அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை 3086 ஆக குறைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மக்­க­ளின் வாழ்வாதா­ரம் கருதி அர­சால் பல்­வேறு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

மிக முக்­கி­ய­மாக சமு­தாய, கலா­சார, அர­சி­யல் கூட்­டங்­கள் போன்ற பொது­மக்­கள் கூடும் நிகழ்­வு­க­ளுக்­கும் உள்ள தடை நீடிக்­கும் என்­றும் திரு­ம­ணம், அது சார்ந்த நிகழ்­வு­கள் அதி­க­பட்­சம் இரு­நூறு பேரு­டன் மட்­டும் நடத்த அனு­ம­திக்­கப்­படும் என்­றும் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

இறப்பு சார்ந்த நிகழ்­வு­களை நடத்த நூறு பேருக்­கும் மிகாமல் அனு­ம­திக்­கப்­படும் என்­றும் கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கைக்­காக விதிக்­கப்­பட்ட ஏனைய பிற கட்­டு­பா­டு­கள் அனைத்­தும் விலக்­கிக்கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­றும் அரசு கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, மாநி­லம் முழு­வ­தும் பாலர் பள்­ளி­கள், மழலை­யர் விளை­யாட்­டுப் பள்­ளி­க­ளைத் திறக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் பொருள்­காட்­சி­கள் நடத்­த­வும் அனு­ம­திக்­கப்­பட்­டதை அடுத்து அரசு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­களுக்கு பொது­மக்­கள் அனைத்து வகை­யி­லும் ஒத்­து­ழைக்க வேண்­டும் என அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே நேற்­று­ முன்­தினம் தமி­ழ­கத்­தில் புதி­தாக 3,086 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. இதே வேளை­யில் தொற்­றில் இருந்து 14,051 பேர் முழு­மை­யாகக் குண­ம­டைந்­துள்­ள­னர் என்று மக்­கள் நல்­வாழ்வு, மருத்­து­வத்­துறை தெரி­வித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் மேலும் 25 பேர் தொற்­றுப் பாதிப்­பால் மாண்­டு­விட்­டனர்.

நேற்று முன்­தி­னம் அனைத்து மாவட்­டங்­க­ளி­லுமே முந்­தைய நாளை­விட புதி­தாக தொற்றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. பெரும்­பா­லான மாவட்­டங்­களில் அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை இரு­நூற்­றுக்­கும் குறை­வா­கவே பதி­வா­னது.