தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்தகக் கண்காட்சி: 20,000 பேர் இணையத்தில் முன்பதிவு

1 mins read
7677cdc6-57a8-4fcc-80bf-9911178951af
-

சென்னை: சென்னை புத்­த­கக் கண்­காட்­சிக்கு இணை­யம் வழி (ஆன்லைன்) சுமார் 20 ஆயி­ரம் பேர் நுழை­வுச் சீட்டை முன்­ப­திவு செய்­துள்­ள­னர்.

இத்­த­க­வலை தென் இந்­திய புத்­தக விற்­ப­னை­யா­ளர்­கள், பதிப்­பா­ளர்­கள் சங்­கத்­தின் (பபாசி)செய­லா­ளர் முரு­கன் தெரி­வித்துள்­ளார்.

எதிர்­வ­ரும் 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை சென்னை புத்­த­கக் கண்­காட்சி நடை­பெற உள்­ளது.

கொரோனா நெருக்­கடி குறைந்­துள்­ளதை அடுத்து கண்­காட்­சியை நடத்த தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இணை­யம் வழி செய்­யப்­பட்­டுள்ள முன்­ப­தி­வு­களின் எண்­ணிக்கை கண்­காட்சி ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு உற்­சா­கம் அளித்­துள்­ளது.

சென்னை புத்­தக கண்­காட்­சி­யில் ஆண்­டுக்கு ஆண்டு புத்­தக அரங்­கு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­படி உள்­ளது. இந்த ஆண்டு சுமார் ஆயி­ரம் அரங்கு­­களை அமைக்க திட்­ட­மிட்டு இருந்­த­தா­க­வும் கொரோனா நெருக்­க­டி­யால் அந்த எண்­ணிக்கை 800ஆக குறைந்­துள்­ளது என்­றும் ஏற்­பாட்­டா­ளர்­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"இம்­முறை சுமார் நூறா­யிரத்­துக்­கும் மேற்­பட்ட பல்­வேறு தலைப்­பு­களில் புத்­த­கங்­கள் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட உள்­ள­து.

"மேலும் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள், கர்ப்­ப­ணிப் பெண்­க­ளுக்கு அனு­மதி வழங்க வேண்­டாம் என்று அரசு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

"கண்காட்சிக்கு வருகை தரும் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்," என 'பபாசி' தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.