இலங்கையுடன் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்து

இலங்கையுடன் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்து

2 mins read
00be77f4-ff1b-4e44-8b6a-dbc8027665b7
இலங்கை வசம் இருந்த மீன்பிடி விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் அங்குள்ள ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.படம்: ஊடகம் -

மேலும் 21 தமிழக மீனவர்களைக் கைது செய்தது இலங்கைக் கடற்படை

சென்னை: ராமே­சு­வ­ரம் மீன­வர்­கள் 21 பேரை இலங்­கைக் கடற்­படை கைது செய்­துள்­ளதை அடுத்து, நீண்ட கால­மா­கத் தொடர்ந்து வரும் இந்தச் சிக்­க­லுக்கு நிலை­யான தீர்­வைக் காண வேண்­டி­யது மிக­வும் இன்­றி­ய­மை­யா­தது என தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

அதன் தொடக்­க­மாக, இரு­தரப்­புப் பேச்­சு­வார்த்­தை­களுக்­கான ஆலோ­ச­னை­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என பிர­த­மர் மோடிக்கு எழு­தி­யுள்ள கடி­தம் ஒன்­றில் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

நேற்று முன்­தி­னம் ராமே­சு­வரத்­தில் இருந்து ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட விசைப்­ப­ட­கு­களில் சுமார் இரண்டா­யி­ரம் மீன­வர்­கள் கட­லுக்கு மீன்­பி­டிக்­கச் சென்­றனர்.

தனுஷ்­கோடி, தலை­மன்­னார் இடையே கட­லில் அவர்­கள் மீன்­பி­டித்து கொண்­டி­ருந்­த­போது, அங்கு வந்த இலங்கை கடற்­ப­டை­யி­னர் இரண்டு விசைப்­ப­ட­கு­களில் இருந்த 12 மீன­வர்­களை எல்லை தாண்டி மீன் பிடித்­த­தாக கூறி நள்­ளி­ர­வில் கைது செய்­த­னர்.

மேலும், மீன­வர்­களின் இரு படகு­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இலங்கை கடற்­ப­டை­யால் தமி­ழக மீன­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­வ­தைக் கண்­டித்து நாகை பகுதி மீன­வர்­கள் கால­வ­ரை­யற்ற போராட்­டத்தை அறி­வித்த பிற­கும் நிலைமை மாற­வில்லை.

இந்­நி­லை­யில், கடந்த இரண்டு வாரங்­களில் மட்­டும் இவ்­வாறு நடந்­துள்ள மூன்­றா­வது சம்­ப­வம் இது என்­ப­தை­யும், தற்­போது வரை, தமி­ழ­கத்­தைச் சேர்ந்த மீன­வர்­கள் 41 பேரும் 6 மீன்­பி­டிப் பட­கு­களும் இலங்­கைக் கடற்­ப­டை­யின் வசம் உள்­ள­தா­க­வும் முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

"கொரோனா தீவி­ரம் குறைந்துள்ள தற்­போ­தைய நிலை­யில், கூட்­டுச் செயற்­கு­ழுக் கூட்­டம் மூலம் பேச்­சு­வார்த்­தை­களை உட­ன­டி­யாக தொடங்க வலி­யு­றுத்­து­கி­றேன்.

இரு நாட்டு மீன­வர்­க­ளுக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைக்­கும் வழி­வகை செய்­திட வேண்­டும்.

தமி­ழ­கத்தைச் சேர்ந்த 41 மீனவர்­களை விடு­விக்க உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை விரை­வுப்­ப­டுத்­துங்­கள்," என முதல்­வர் ஸ்டா­லின், பிர­த­ம­ருக்கு அனுப்­பிய கடி­தத்­தில் மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதற்கிடையே, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் கொடுமைக்கு முடிவே இல்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரனும், இலங்கை அரசின் அட்டூழியங்களை எத்தனை நாள் வேடிக்கை பார்க்கப் போகிறோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.