விஷ ஊசி: நால்வரைக் கொன்ற தம்பதியர் கைது

விஷ ஊசி: நால்வரைக் கொன்ற தம்பதியர் கைது

2 mins read
ea399b24-d461-4a80-8d7d-90d3b0474b43
கைதான ஸ்டீஃபன், அமலோற்பவம் தம்பதியர். படம்: ஊடகம் -

கோவை: பணத்­துக்­காக விஷ ஊசி போட்டு பல­ரைக் கொன்­ற­தாக சந்­தே­கிக்­கப்­படும் தம்­ப­தி­யர் கோவை காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கோவை­யைச் சேர்ந்த 31 வயதான வாட­கைக் கார் ஓட்­டு­நர் சனு அண்­மை­யில் திடீ­ரென மாய­மானார். அவ­ரது பெற்­றோர் அளித்த புகா­ரின் பேரில் காவல்­துறை தீவிர விசா­ரணை நடத்தி வந்­தது.

இந்­நி­லை­யில், கோவை ஓணாப்­பா­ளை­யம் பகு­தி­யில் சனு­வின் கார் நிற்­ப­தும் அதன் அருகே பலத்த காயங்­க­ளு­டன் அவ­ரது உடல் காணப்­ப­டு­வ­தா­க­வும் காவல்­துறைக்கு தக­வல் கிடைத்­தது.

கொலைக்­கான பின்­னணி, கொலை­யா­ளி­கள் குறித்து எந்தவிதத் தக­வ­லும் இல்லை. எனி­னும், கடந்த 8ஆம் தேதி­யன்று இரவு வேளை­யில் ஓணாப்­பா­ளை­யத்­தைச் சேர்ந்த யாரோ சனுவை தொடர்பு கொண்டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து அந்­தக் கைபேசி இணைப்பு யாரு­டை­யது என்று விசா­ரித்த காவல்­து­றை­யி­னர், தங்­க­ளுக்­குக் கிடைத்த முக­வ­ரிக்­குச் சென்­ற­போது அங்கு ஸ்டீ­ஃபன், அவ­ரது மனைவி அம­லோற்­ப­வம் (35 வயது) ஆகிய இரு­வ­ரும் வசித்து வரு­வது தெரி­ய­வந்­தது.

விசா­ர­ணை­யின்­போது இரு­வ­ரும் முன்­னுக்­குப்­பின் முர­ணா­கப் பேசி­யதை அடுத்து, அதி­கா­ரி­கள் சந்­தே­க­ம­டைந்­த­னர்.

எனவே விசா­ர­ணையை கடுமை­யாக்­கி­யதை அடுத்து, சனுவை கொலை செய்­த­தாக ஸ்டீ­ஃபன் ஒப்­புக்­கொண்­டார். பணத்­துக்­காக இவ்­வாறு செய்­த­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

ஸ்டீ­ஃப­னின் முதல் மனைவி அவ­ரைப் பிரிந்து சென்­று­விட்­டார். அதன் பிறகு தமது குழந்­தை­களை கவ­னித்­துக்­கொள்ளும் பணிக்கு வந்த அம­லோற்­ப­வத்தை அவர் இரண்டா­வ­தாக திரு­ம­ணம் செய்து கொண்­டுள்­ளார்.

"அம­லோற்­ப­வத்­தின் முதல் கண­வரை விஷ ஊசி போட்டுக் கொன்­றேன். இது தொடர்­பாக எங்­கள் இரு­வர் மீதும் வழக்கு உள்ளது. கைதாகி சிறைக்­குச் சென்று, பிணை பெற்று வெளியே வந்­த­தும் தலை­ம­றை­வா­னோம்.

"முதல் மனை­வி­யின் சொத்­து­கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்­துக்கொண்டு கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக மகிழ்ச்­சி­யாக வாழ்ந்­தோம். அந்­தப் பணம் கரைந்து போன­தும் என்ன செய்­வது என்று தெரி­யா­மல் திரு­ட­லாம் என முடிவு செய்­தோம்," என்று ஸ்டீ­ஃபன் தமது வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக காவல்­துறை கூறி­யுள்­ளது.

ஓட்­டு­நர் சனு­வி­டம் நிறைய பணம் இருப்­ப­தா­கத் தக­வல் கிடைத்த­தா­க­வும் அத­னால்­தான் அவரை தனியே வர­வ­ழைத்து கொன்­ற­தாகவும் ஸ்டீஃபன் குறிப்­பிட்­டுள்­ளார்.

பொது நட­மாட்­டம் அதி­கம் இல்­லாத இடத்­துக்கு வந்­த­பின், கட்­டை­யால் சனுவை தலை­யில் தாக்கி­ய­தில் அவர் மயங்கி விழ, அதன் பின்­னர் மரணத்தை ஏற்­ப­டுத்­தும் மாத்­தி­ரையை நீரில் கரைத்து அதை ஊசி­யாக செலுத்தி உள்­ள­னர்.

இத­னால் இரண்டு நிமிடங்­க­ளுக்­குள் சனு­வின் உயிர் பிரிந்­து­விட்­ட­தா­க­வும் அவ­ரி­டம் ஆறா­யி­ரம் ரூபாய் மட்­டுமே இருந்த­தா­க­வும் ஸ்டீ­ஃபன் கூறி­யுள்­ளார்.

சென்­னை­யில் மட்­டுமே நான்கு பேரை இவ்­வாறு விஷ ஊசி போட்டுக் கொன்­ற­தாக அவர் கூறி­ இ­ருப்­பது பர­ப­ரப்பை ஏற்­படுத்தி உள்­ளது. இருவரிடமும் விசாரணை நீடித்து வருகிறது.